கோவை, ஜன.12- பொங்கல் திருநாளை யொட்டி பொள்ளாச்சி சேவல் சந்தையில் சேவல் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி வார சந்தையில், வாரந்தோறும் வியாழனன்று சேவல் சந்தை நடைபெறும். தை பொங்கல் பண்டிகை நெருங்கி உள்ளநிலையில், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராள மானோர் நாட்டுக்கோழி, சேவல்களை விற் பனை செய்யவும், வாங்கவும் வந்திருந்தனர். அதில், காகம், மயிலு, மஸ்து, வெள்ளை கால் நூல் போன்ற சேவல்கள் 4000 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்பனை யானது. பொங்கல் பண்டிகை என்றாலே கால் நடைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வழி படுவதால், பெரும்பாலானோர் சைவ உணவுக்கே முக்கியத்துவம் அளிப்பர். பொங்கல் பண்டியின் இறுதி நாளில் அசைவ உணவு விருந்து தடபுடலாக இருக்கும். இதில், கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி மற்றும் சேவல் இறைச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பர். இதன்காரணமாக வியாழனன்று நடைபெற்ற சேவல் சந்தையில் ஏராளமா னோர் கோழி, சேவல்களை வாங்கி சென்ற தால், வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
மாட்டுச்சந்தை
இதேபோன்று, தென்னிந்தியாவின் மிகப் பெரிய சந்தையாக விளங்கி வரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம் செவ் வாய் மற்றும் வியாழன் இரு தினங்களில் கூடு கிறது. இந்த மாட்டுச் சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஏராளமான மாடுகள் விற்ப னைக்கு வருவது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகை வரும் நிலையில் வழக்க மாக மாடுகள் விற்பனைக்கு அதிக அளவில் வரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வியாழனன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தை யில், மாடுகள் வரத்து குறைவாக காணப் பட்டது. இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறு கையில், வழக்கமாக பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு இரு தினங்களில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வரும் நிலையில், பொங்கல் பண்டிகை காரணமாக குறைந்த அளவே மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தைக்கு வந்த வெளி மாநில வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த மாடுகளை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.