tamilnadu

img

பாரெங்கும் பரவிய சொற்கள்! - அ.குமரேசன்

ஒரு கிராமம்.  கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளைத் தோழர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடக் கூடியிருக்கிறார்கள். ஒரு  மூத்த தோழர் கம்பத்தில் செங்கொடி உயர்த்துகிறார்.  ஒரு தோழர் “செங்கொடிக்கு” என்று குரலெழுப்புகிறார்.  உடனே மற்ற தோழர்கள் “ஜே” என்று வாழ்த்தொலிக்கிறார்கள். மென்மையாக வீசுகிற காற்றோடு உணர்ச்சிநிறை  முழக்கமும் சேர்ந்து கொடியை அலை போல அசைந்தாடிப் பறக்க வைக்கிறது. ஒரு தொழிற்சாலை. குறிப்பிட்ட  துறை யின் தொழிலாளர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவாக மற்ற துறைகளைச் சேர்ந்த தொழி லாளர்களும் கூடியிருக்கிறார்கள். விண்ணதி ரும் முழக்கம் எழுப்பப்படுகிறது. “ஜிந்தா பாத் ஜிந்தாபாத்,  ஒர்க்கர்ஸ் யூனிட்டி ஜிந்தா பாத்!”  எல்லோரும் கரத்தையும் குரலையும் உயர்த்தி ஒலிக்கிறார்கள். பெய்யப் போகி றேன் என்று திரண்டிருக்கும் மேகம் ஆர்ப்பாட்டம் முடியும் வரை காத்திருக்க முடிவு செய்கிறது. அந்த “ஜே”  தமிழ்ச்சொல் அல்ல. “ஜிந்தா பாத்”, “ஒர்க்கர்ஸ் யூனிட்டி” இவையும் தமிழ்ச்சொற்கள் அல்ல. ஆயினும் அவர்கள் அவற்றைத் தங்களது சொற்களாகவே உள் வாங்கி முழங்குகிறார்கள். தமிழகத்தில், அந்தக் கிராமத்தில் மட்டுமா, மற்ற மாநி லங்களிலும் மற்ற ஊர்களிலும் அந்தந்த மொழியில் செங்கொடிக்கான சொல்லை உச்சரிக்கிறபோது “ஜே” இணைகிறது.  வேறு  பல நாடுகளிலும் தொழிலாளர் திரட்சியில்  “ஒர்க்கர்ஸ் யூனிட்டி” முன்வைக்கப்படு கிறது, “ஜிந்தாபாத்” பின்தொடர்கிறது. ஆம், இந்தச் சொற்கள் தாம் பிறந்த  மொழிகளோடு நின்றுவிடாமல் எல்லோ ருக்குமானவையாகப் பரவியிருக்கின்றன. இதைப் பற்றிய சிந்தனையில் திளைத்தி ருந்தபோது, “ஹலோ, என்ன பலத்த யோச னையில இருக்கீங்க போல,” என்று கேட்ட வாறு அருகில் அமர்ந்தார் நண்பர். அவரிடம்  சிந்தனையைப் பகிர்ந்தேன். “இன்ட்ரெஸ்ட் டிங்,” என்றார். இத்தகைய எல்லை கடந்த  சொற்கள் பற்றியே சிறிது நேரம் உரையாடி னோம்.

ஹலோ ஹலோ சுகமா?

“நான் இன்ட்ரெஸ்ட்டிங்னு சொன் னேனே, அது கூட இங்கிலீஷ்தானே?,” என்று  நண்பர் வினவினார். “அது உங்க ஆங்கில அறிவிலிருந்தும் பழக்கத்திலிருந்தும் வருது. ஆனா, முதல்ல  ஹலோன்னு சொன்னீங்களே, அதை ஆங்கி லம் தெரியாதவங்களும் சொல்றாங்க. அது ஆங்கிலம்னு தெரியாமலே சொல்றாங்க,” என்று நான் விடையிறுத்தேன். “சரிதான். புதுசா ஒரு கட்டுரைக்கு லேபர் நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கிறேன். சீக்கிரம் டெலிவரி பண்ணிடுங்க,” என்று கூறி விட்டு விடை பெற்றார்.  அவர் போனால்  என்ன, நம்மிடம்தான் உரையாடுவதற் கென்றே சேட்ஜிபிடி ஏஐ இருக்கிறதே என்று  கணினியில் அதனைத் திறந்துவைத்துக் கொண்டு, இது தொடர்பாக அதற்குத் தெரிந்த  தகவல்களை நான் கேட்டறிய, எனக்குத்  தெரிந்ததை அதுவும் கேட்டுத் தெரிந்து கொண்டது. ‘ஹலோ’ (சரியாகச் சொல்வதானால் ‘ஹெலோ’) என்ற சொல் உருவாகி இரண்டு  நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ஆங்கி லத்தில் ஏற்கெனவே 16ம் நூற்றாண்டிலி ருந்து புழக்கத்தில் இருந்து வந்த ஹல்லோ,  ஹால்லோ, ஹோல்லோ என்ற சொற்களிலி ருந்து இது உருவானதாகத் தெரிகிறது. முற்கால ஜெர்மன் மொழியின் ஹாலா, ஹோலா என்ற சொற்களிலிருந்து இவை ஆங்கிலத்திற்கு வந்தனவாம். ஒருவரது கவ னத்தைக் கவர, வியப்பைத் தெரிவிக்க, யாரையேனும் கூப்பிட அந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டு நடை முறைக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் மக்களிடையே ‘ஹலோ’ பற்றிக்கொண்டது.  அந்தக் கருவியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் முதலில் அஹோய்  என்ற சொல்லைப்  பயன்படுத்தினாராம். தாமஸ் ஆல்வா எடிசன்  பின்னர் ஹலோ என்று பயன்படுத்தத் தொடங்க அதுவே தொலைபேசிக்கான கையேட்டில் இடம்பெற்றதாம். தற்போது, தொலைபேசி அழைப்புகளுக்கு அப்பால்,  நேரில் சந்திக்கிறபோதும் ஒருவரையொரு வர் விளிப்பதற்கும், வியப்புடன் விழிகளை விரிப்பதற்குமான சொல்லாகிவிட்டது. நட்பு வட்டாரத்துக் குடும்ப இணையர் இருவர் எப்போது பேசிக்கொண்டாலும் ஹலோ சொல்லிதான் தொடங்குவார்கள். “‘ஹலோ, என்னப்பா இட்லி கொஞ்சம் கெட்டியா இருக்கு?” “ஹலோ, இருக்கிற தைச் சாப்பிட்டுப் போப்பா, சாம்பாரை நிறையா ஊத்திக்கோ. ஓகேயா?”… இப்படியாக.

ஓகே கண்மணி

அந்த “ஓகே” இருக்கிறதே, அதுவும் கண்டங்கள் கடந்த ஒரு சொல்தான். அமெ ரிக்காவின் பாஸ்டன் வட்டாரத்தில் 1830ம்  ஆண்டுகளில் இந்தச் சொல் அறிமுகமா னது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறு வதற்கான “ஆல் கரெக்ட்” என்ற ஆங்கிலச் சொற்களை யாரோ “ஓல் கொரெக்ட்” (Oll Korrect) என்று எழுத்துப் பிழையோடு எழு தப்போக, அதுதான் சரி என்று நினைத்துப்  பலரும் அப்படியே எழுத, நாட்கள் செல்லச்  செல்ல, சுருக்கப்பட்ட வடிவமாக அந்தச் சொற்களின் முதல் எழுத்துகளை எடுத்துக் கொண்டு “ஓகே”  வந்ததாம். ஆட்சியதிகாரம், வணிகத் தொடர்புகள், அலுவலகச் செயல்பாடுகள் என்று அனைத்து நாடுகளி லும், ஒரு செயலை ஏற்பதற்கான, உறுதிப் படுத்துவதற்கான சொல்லாக “ஓகே” ஊன்றிக்கொண்டுவிட்டது. வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போதும், நாமே வெளியூர்ப் பயணம்  புறப்படுகிறபோதும் “பை” என்று கூறி கைய சைப்பது வழக்கமாகிவிட்டது. அந்தக் காலத்தில் இப்படியான நேரங்களில் “காட் பி  வித் யூ” (கடவுள் உன்னோடு இருப்பாராக)  என்று கூறி விடைபெறுகிற வழக்கம் இருந்தி ருக்கிறது. கடவுள் தன்னோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதவர்களும் இருந்திருப்பார்கள் அல்லவா? பிற்காலத்தில்  அந்த நான்கு சொற்கள் கொண்ட பதம்,  நல்லாயிரு என்று வாழ்த்தும் வகையில் “குட்பை” என்று சுருங்கியதாம். தொடர்ச்சி யாக ஓடியும்  நடந்தும்  குனிந்தும் நிமிர்ந்தும் பயிற்சியால் கச்சிதமாக்கிக்கொள்ளும் உடல் போல குட்பை மேலும் மெலிந்து “பை” என்றாகிவிட்டது. ஹலோ போலவே, ஒருவரையொருவர் அழைக்கவும், சந்திப்பின்போது ஒருவர்க்கொருவர் வாழ்த்தவும் கூறப்படும்  சொல் “ஹை”. மொழி வேலிகளைத் தாண் டிய இந்தச் சொல், 11 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான மைய ஆங்கிலக் காலக்கட்டத்தில் புழக்கத் தில் இருந்த “ஹேய்”, “ஹய்ய்” என்ற சொற்களிலிருந்து புறப்பட்டது.

ம்மா, ப்பா

அம்மா, அப்பா என்ற சொற்கள் பல மொழிகளிலும் அப்படியே அல்லது சிறு ஒலி மாறுதல்களுடன் புழங்குகின்றன. மா, பா, மம்மா, பப்பா என்று. பேசப் பழகும்  குட்டிக் குழந்தைகளின் தொடக்க உச்சரிப்பு கள் பெரும்பாலும் ம்மா, ப்பா என்றுதான் வரும். அதிலிருந்தே இந்தச் சொற்கள் உரு வாகின. காலையில் வாழ்த்தும் ‘குட் மார்னிங்’, இரவில் இனிய உறக்கத்திற்காக ‘குட் நைட்’,  நன்றி தெரிவிப்பதற்கான “தேங்க் யூ”, வருத்தம் தெரிவிப்பதற்கான “சாரி”. தயவு செய்து என எதையேனும் கோருவதற்கு ‘ப்ளீஸ்’  ஆகிய சொற்களும் அப்படித்தான், மொழி அடையாளத்தைத் தாண்டிப் பயன் படுத்தப்படுகின்றன. அரபு மொழியிலிருந்து வந்த வசூல், வாரிசு, பாரசீக மொழியிலிருந்து சரிகை,  சால்வை என பல சொற்கள் தமிழோடு கலந்து விட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்திலிருந்து வந்த விஷயம், அர்த்தம், அனுஷ்டிப்பு,  உபதேசம், கீர்த்தனை, சம்பிரதாயம், சாஸ்திரம், ஜலதோஷம், சினேகிதம் ஆகி யன உள்ளிட்ட ஏராளமான சொற்கள் தமிழ்   வடிவமாக்கப்பட்டுப் புழங்குகின்றன. இவற்றுக்கு மாற்றாகத் தமிழ்ச் சொற்க ளையே பேசுவதிலும் எழுதுவதிலுமான சுகத்தை அனுபவிக்கிற முயற்சிகளும் நடை பெறுகின்றன. மனம் – மனசு – மனஸ், வார்த்தை – வார்த்தா, அதிகம் – அதிக், ஆலயம் – ஆலயா, முக்கியம் – முக்கியா, காவியம் – காவ்யா, இராத்திரி – ராத், மெது –  ம்ருது, தலம் – ஸ்தலா என தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குச் சென்ற சொற்களும் நிறைய இருக்கின்றன. இதே போல் இந்தி யாவின் பிற மொழிகளுக்கும் தமிழ்ச்சொற் கள் சென்றிருக்கின்றன நம்ம ஊரின் “அய்யோ” அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பரவியிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் இந்தச் சொல்லைக் கூறு வதைக் கேட்கலாம். அதே போல தமிழிலி ருந்து சென்ற அரிசி ஆங்கிலத்தில் ‘ரைஸ்’  என்றும், கட்டுமரம் அங்கே ‘கேட்டமரான்‘ என்றும், மிளகுத் தண்ணீரிலிருந்து ‘முல்லி காட்டாவ்னி’ என்றும்,  சுருட்டு ‘செரூட்’ என்றும், கயிறு ‘காயர்’ என்றும், வெற்றிலை ‘பேட்டல்’ என்றும் புழக்கத்தில் இருக்கின்றன.

தமிழின் மங்கை, அங்கே, இங்கே, நகரம் ஆகிய சொற்கள் ஆஸ்திரேலியாவின் சில பழங்குடி  மக்களால் அதே பொருள்களில் சொல்லப்படுகின்றன. கொரிய மொழியில் நம்முடைய நான், நீ, நாள், புல், ஏறு ஆகிய  சொற்கள் இருக்கின்றன என்று ஒரு தக வல் தெரிவிக்கிறது. முறையான ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்படுமானால் இப்படிப்  பட்ட ஏராளமான சொற்கள் கிடைக்கக் கூடும். ஒரு மொழியிலிருந்து வேறு மொழி யையும் தழுவிக்கொண்ட சொற்கள் மட்டுமல்லாமல், உலகின் பல மொழிகளைப் பேசும் மக்களும்  உச்சரிக்கிற பொதுவான சொற்கள் தொகுக்கப்படுவது முக்கியமான ஆவணமாகப் பதிவாகிவிடும்.  நெடுங்காலத்திற்கு முன்பே பல சொற்  கள் இப்படிக் கண்டம் விட்டுக் கண்டம் தாவியிருக்கின்றன. தொழில், வேலை உள்ளிட்ட உலகளாவிய தொடர்புகள், ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழும் மக்கள், பிற்காலத்திய நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி  நிகழ்ச்சி கள், இசை நிகழ்ச்சிகள் இன்ன பல கார ணங்களால் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. ஒரு பக்கம், ஆக்கிரமிக்க வரும் மொழித்  திணிப்புகளை எதிர்த்து அவரவர் மொழி யின் தனித்துவத்தையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கான போராட்ட நியாயங்கள் தொடர்கின்றன. இன்னொரு பக்கம், வலுக்கட்டாயத் திணிப்புகள் இல்லாமல், வாழ்க்கை சார்ந்து இயல்பாக நிகழ்கிற இத்தகைய சொற்பரவல்கள்  பூமியெங்கும் மனிதர்கள் யாவரும் ஒன்றே எனக் காட்டு கின்றன.