tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பிற்கு தஞ்சாவூரில் பட்டாசு வெடித்து வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பிற்கு தஞ்சாவூரில் பட்டாசு வெடித்து வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.  அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகரக் குழு மற்றும் பல்வேறு அரங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.