சிபிஎம் மாவட்டக் குழு பெண் உறுப்பினர்களுக்கு அரசியல் பயிற்சி முகாம்
குழு பெண் உறுப்பினர்களுக்கான மாநில அரசியல் பயிற்சி முகாம் தேனி மாவட்டம் அருகே வீரபாண்டியில் சனிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முகாமை தொடக்கி வைத்து உரையாற்றினார். முதல் அமர்விற்கு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சுகந்தி தலைமை வகித்தார். “இந்தியாவில் மதங்களும் மதச்சார்பின்மை வரலாறும்” எனும் தலைப்பில் மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன் உரையாற்றினார். பிற்பகலில் நடைபெற்ற அமர்விற்கு மாநிலக் குழு உறுப்பினர் பிரமிளா தலைமை வகித்தார். “மாதர் அரங்கில் கட்சியை கட்டும் பணி” எனும் தலைப்பில் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி உரையாற்றினார். ஞாயிறன்று (ஜூன் 29) காலை “பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் 100 ஆண்டுகள்” எனும் தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் இரா.சிந்தன் பேசுகிறார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் அ.ராதிகா மாதர் அரங்க மாநிலக் குழு முடிவுகளை விளக்கி பேசுகிறார். செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் “சோசலிசம் எதற்காக” என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.