மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களை
முன் கூட்டியே கைது செய்த காவல்துறை]
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே யுள்ள சாமிநத்தம் ஊராட்சியை மாநகராட்சி யுடன் இணைக்கக் கூடாது என வலி யுறுத்தி மறியல் போராட்டம் அறிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்களை முன்கூட்டியே போலீ சார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் அ.குருசாமி அறிக்கை வெளியிட் டுள்ளார். அதில் கூறியதாவது: சிவகாசி அருகே உள்ளது சாமிநத்தம் ஊராட்சி. இந்த ஊராட்சியை சிவகாசி மாநக ராட்சியுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவ் வாறு செய்தால், 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயரும். குப்பைக் கும் வரி விதிக்கப்படும். எனவே, சாமி நத்தம் ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி கடந்த பிப்.17 இல் மாவட்ட ஆட்சியர் அலுலவகம் முன்பு ஏராளமான பொது மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஒரு மாதமாகியும் அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களைத் திரட்டி மார்ச் 17 இல் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டில் புறப் பட்டுக் கொண்டிருந்த கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலசுப்பிர மணியன் மற்றும் மாநகரச் செயலாளர் ஆர். சுரேஷ்குமார் ஆகியோரை காவல்துறை யினர் அராஜகமான முறையில் கைது செய்து மல்லி காவல்நிலையத்தில் அடை த்து வைத்துள்ளனர். மேலும் ஊர்த் தலைவர்கள், வயது முதிர்ந்தவர்கள் உட்பட12 பேரையும் கைது செய்துள்ள னர். பின்பு, மாலை 5 மணிக்கே அனைவரை யும் விடுவித்துள்ளனர். திருவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினரின் இச்செயல் ஏற்புடை யதல்ல. இதனை மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒரு ஜன நாயக நாட்டில் கோரிக்கைகள் நிறை வேறாத பட்சத்தில் போராட்டம் நடத்திட பொதுமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், கோரிக்கை மீது நடவ டிக்கை எடுக்காமல் போராட்டத்தை ஒடுக் கும் வகையில், போராட்டத்தில் ஈடுபடு வர்களை முன் கூட்டியே கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மாவட்டக் காவல்துறை, உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறும் பட்சத்தில் மாவட்டம் முழுவதுமுள்ள மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப் படும் என அந்த அறிக்கையில் தெரிவித் துள்ளார்.