கவிஞர் தமிழ்ஒளியின் 57 ஆம் ஆண்டு நினைவுதின உரை- கவிதை வாசிப்பு சென்னை எம்.ஜி.ஆர் நகர் சுந்தரம் பள்ளியில் அண்மையில் நடை பெற்றது. நிகழ்விற்கு முன்னதாக கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாக்குழு தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் தலைமை யில் நூற்றாண்டு விழாக்குழு கூட்டம் நடை பெற்றது. விழாக்குழு செயலாளர் இரா.தெ.முத்து, பொருளாளர் வே.மணி, குழு உறுப்பினர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகி பேரா சிரியர் கணபதி இளங்கோ, புதுச்சேரி சண்முகசுந்தரம், மணிநாத், சென்னை கலைக்குழு அசோக்,தமிழ்ஒளி கலைக் குழு நீலகண்டன் உட்பட பலர் பங்கு கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்இலக்கியத்துறையின் கவனிப்பில் ஆண்டு தோறும் தமிழ்ஒளி படைப்புகளை ஆய்வு செய்து உரையாற்றவல்ல கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு அறக்கட்டளை ஒன்றை ரூபாய் ஐந்துலட்சம் மதிப்பீட்டில் உருவாக்குவது. தஞ்சை தமிழ்பல்கலைக்கழகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகள் குறித்த கலை இலக்கியப் போட்டிகளை முன்னெடுப்பது.
கடந்தஆண்டு தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து கையளித்த கோரிக்கை மீதான மேல்நடவடிக்கைக்காக தமிழ்நாட்டு முதல் வரை சந்தித்து கோரிக்கைகளை கையளிப் பது என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நடைபெற்ற பொதுநிகழ்வில் தமிழ் ஆய்வுலகில் கவிஞர் தமிழ்ஒளி தலைப்பில், சென்னை பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் ரேவதி பழனிச்சாமி உரையாற்றினார். கவிஞர் தமிழ்ஒளி ஒரு கவிதைச்சூரி யன் தலைப்பில் நடைபெற்ற கவிதை வாசிப்பில் நா.வே.அருள் ஒருங்கிணைப் பில் கவிஞர்கள் முனைவர் மஞ்சுளா, சி.எம்.குமார்,முகம் இளமாறன்,கணபதி இளங்கோ, தளவை இராசேந்திரன், பாரி கபிலன் போன்றோர் கவிதைகள் வாசித்தனர்.