பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணை
வெளியீடு 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு, ஜூன் 25 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அட்டவணை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாணவர் கள், மே 14 முதல் ஜூன் 29 வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 26 ஆங்கில மொழிப் பாடத்திற்கும், ஜூன் 27 கணிதம், உயிரி யல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
மே 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 10, 11 தேதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 14-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
போர்ப் பதற்றம்: உதவி எண்கள் அறிவிப்பு!
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதலால் பதற்றம் நிலவுகிறது. இதனால், ஜம்மு - காஷ்மீரின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையோரப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக மாணவர்களை மீட்பதற்கான நட வடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. காஷ் மீருக்குப் படிக்கச் சென்ற 41 மாணவர்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் தொடர்பு கொள்ள ‘வாட்ஸ் அப்- 75503 31902’, ‘இலவச எண்- 80690 09901’ மூலம் அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 20- வேலை நிறுத்தம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி பங்கேற்பு!
மே 20 - பொது வேலைநிறுத்தத்தில் ஐக்கிய விவசாயி கள் முன்னணி (எஸ்கேம்) பங்கேற்கிறது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருகின்ற ஒவ்வொரு சட்டமும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிறது. இதற்கெதிராக மே 20 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் (சம்யுக்த கிஷான் மோர்ச்சா) பங்கேற்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கடைகள்: வணிக நிறுவனங்களுக்கான அனுமதி நீட்டிப்பு
24 மணிநேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருப்பதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுக ளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,“முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இது, 2025 மே 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் வணிகர்கள், பொதுமக்கள் பயனடைவார்கள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 8 வரை விண்ணப்பம்
சென்னை, மே 9 - வேளாண் படிப்புக்களுக்கான விண்ணப்ப அறிவிப்பை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகம் மற்றும் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் மாண வர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் மே 9 முதல் ஜூன் 8 வரை இணைய தளத்தில் பூர்த்தி செய்து விண்ணப் பிக்கலாம். பொதுப் பிரிவு, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மாண வர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300. தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, தொ ழில்முறைக் கல்வி பாடப் பிரிவி னருக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக் கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திற னாளிகளுக்கான 5 சதவிகித இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்க ளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீட்டு என்று சிறப்பு இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளன. வேளாண்மை தகவல் தொ ழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய படிப்பு கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. 80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். ஜூன் 16 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளது. வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கான துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிகளை மேற்கொள்வார்கள். என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.