அரசியல் தலைவர்கள் கண்டனம்
சென்னை: தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்காக பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன்? செலவிட வேண்டும்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். மனிதநேய மக்கள் கட்சியின் தலை வர் ஜவாஹிருல்லா, தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழி களை புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு அளவுக்கு அதிக மான நிதி ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.
கூடுதல் இயக்குநராக மாற்றம்
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர் கோவில் மண்டல அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த ரா.பாஸ்க ரனை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தலைமை யிடத்தில் கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரா.பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் கூடுதல் இயக்குநரானார்.
கோவை, நீலகிரியில் கனமழை
சென்னை: ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக் கிறது. மேலும், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென் னையில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருக்கிறது.
மன்னிப்பு கேட்டார் மணிரத்னம்
சென்னை: “தக் லைப்” படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. நாயகன் படத்தைப் போன்று ரசி கர்கள் எதிர்பார்த்ததால் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத னால் கமலும் நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருக்கிறார்.
திருநங்கையர்க்கு நிபந்தனை தளர்வு
சென்னை: திருநங்கையர்களுக்கு புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களுக்கான தகுதி நிபந்த னைகளை அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி, தகுதி வரம்பு களில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை திருநங்கை, திருநம்பி மற்றும் இடை பாலினத்தவர்களுக்கு முழுவதும் தளர்த்தப்பட்டு புதிதாக அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7 அன்று நடைபெற உள்ள குடமுழுக்கு பூசை அனைத் தும் தமிழில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. யாக சாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓது வார்கள் பூஜை செய்வது உட்பட அனைத்து நிகழ்வுகளும் தமி ழில் நடைபெறும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் அரசு தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக் கையில், “கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிய ருக்கு தற்போது துணைத் தேர்வு நடக்க இருக் கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப் பித்து உள்ளவர்களுக் கான ஹால் டிக்கெட்டுகள் தேர்வுத் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் ஜூன் 25 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் பதி விறக்கம் செய்து கொள் ளலாம். தனித்தேர்வர் கள் தேர்வு எழுத விண்ணப் பித்து ள்ளவர்கள் மேற் கண்ட இணைய தளத்தில் தங்களின் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய் யலாம். செய்முறைத் தேர்வுக் கான தேதி குறித்த விவ ரங்களை தனித் தேர்வர் கள் தமக்கு ஒதுக்கீடு செய்துள்ள தேர்வு மையத் தின் முதன்மைக் கண்கா ணிப்பாளர்களை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வ ரும் தேர்வு எழுத அனு மதிக்கப்பட மாட்டார்கள். துணைத் தேர்வுக்கான தேர்வு அட்டவணையை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேபோன்று, 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர் வுக்கு விண்ணப்பித்து உள்ள தனித்தேர்வர் களுக்கு ஜூன் 26 முதல் 28 ஆம் தேதி வரையி லான நாட்களில் அறி வியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடை பெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடை பெற உள்ளது. மேலும் இத்தேர்வர்கள், தேர் வுக்கு முன்பே செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவ ரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவ லர்களை நேரில் அணுகி பெறலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
நீக்கம் “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் (ரேவா) சங்க உறுப்பினர் கே.கர்சன், ஏ.வரதராஜன் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்து நீக்குவது என்றும், செயலாளர் வீரராகவன் சங்க நிர்வாகிகள் முருகேசன், ராமானுஜபிரசாத் ஆகியோரை இடைநீக்கம் செய்து விளக்கம் கேட்பது என்றும் நிர்வாகி கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேவா பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. அரசு நிர்வாகத்தை எதிர்த்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவதற்கு எஸ்.நடராஜன், எஸ். ஆதிமூலம், டி.ஆறுமுகம் ஆகியோர் பொறுப்பில் இருந்து செயல்படுவார்கள்” என்று அமைப்பின் தலைவர் து.குரு சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.