இ - பாஸ் சோதனைச்சாவடியில் குவியும் நெகிழி பொருட்கள்
மேட்டுப்பாளையம், ஏப்.28– கல்லாறு இ - பாஸ் சோதனைச் சாவடியில், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நெகிழி பொருட் கள் அதிகளவில் குவிந்து வருகி றது. நீலகிரி மாவட்டத்திற்குள் செல் லும் அனைத்து வாகனங்களும் இ - பாஸ் பெற வேண்டியது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சோதனைச்சாவடியில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறை யினர் இணைந்து தீவிர சோதனை கள் மேற்கொண்டு வருகின்றனர். இ - பாஸ் பெறாத வாகனங்களுக்கு அனு மதி மறுக்கப்படுகிறது. சோதனைச் சாவடியில் வாகனங்களின் நீண்ட நேர நெரிசலை தவிர்க்க, தற்போது தானியங்கி பூம் பேரியர் அமைக்கப் பட்டுள்ளது. இ - பாஸ் பெற்ற வாக னங்களின் எண்களை அடிப்படை யாகக் கொண்டு, பூம் பேரியர் தானா கவே திறக்கப்பட்டு வாகனங்களுக்கு வசதியான அனுமதி வழங்கப்படு கிறது. இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மலைப்பகுதியை பாதுகாக்கும் நோக் கில், “ஒன் யூஸ்” பிளாஸ்டிக் பொருட் கள் — குறிப்பாக தண்ணீர் பாட்டில் கள் மற்றும் நெகிழி கவர்கள் — கொண்டு செல்லும் சுற்றுலாப் பயணி களை தடுக்கும் நடவடிக்கையும் தீவி ரமாக எடுக்கப்படுகிறது. சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமா கக் குவிந்துள்ளன, இதனால் அவற்றை முறையாக அகற்றுவதி லும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மாவட்ட நிர்வா கம் சுற்றுலாப் பயணிகளை உலோக பாட்டில்கள், துணிப் பைகள் போன்ற சுற்றுச்சூழலை கெடுக்காத பொருட் களை பயன்படுத்துமாறு அறிவு றுத்தியுள்ளது. நீலகிரி இயற்கை வளங்களை பாதுக்காக்க அனை வரும் ஒத்துழைக்க வேண்டும் என் கிற விழிப்புணர்வும் அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.