tamilnadu

img

விண்ணுக்கு மனிதனை அனுப்ப திட்டம்: விஞ்ஞானி சிவன் தகவல்

நாகர்கோவில், ஏப்.10- இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய சிறப்புபேராசிரியருமான சிவன், நாகர்கோ விலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் இருந்து ராக்கெட்டில் மனி தனை விண்ணுக்கு அனுப்பத் தேவையான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இச்சோதனைகள் இந்த ஆண்டு இறுதிக் குள் நிறைவடைந்து விடும். விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற்கு ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, தரைத்தள சோதனை முதல்கட்டமாக நடத்தப்பட்டு, பின்னர் விண்ணில் ஏவும் சோதனை நடக்க உள்ளது. முதல் 2 கட்டமாக ராக்கெட்டில் ரோபோக்கள் அனுப்பப்படும். அது வெற்றிபெற்ற பின்னர் 3-வதாக மனிதர்கள் அனுப்பப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட் டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க, 2,300 ஏக்கர் நிலம் தேவை. இதில், 50 சதவீத நிலங்களை தமிழக அரசு ஒப்ப டைத்து உள்ளது. மீதமுள்ள நிலங்களை இன்னும் 3 மாதங்களுக்குள் ஒப்படைக்க வாய்ப்புள்ளது. நிலம் முழுமையாக ஒப்படை க்கப்பட்டவுடன் ராக்கெட் ஏவுதளம் கட்டு மானப் பணி தொடங்கும். இவ்வாறு சிவன் கூறினார்.