நீலம்பூர், ஜன.25- சுபிக்ச கேரளா திட்டத்தின் கீழ், 500 ஏக்கரில் மாதிரி காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. புதிய கேரள அரசின் முதலாம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக முதன்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தோட்டங்கள் அமைக்கப்படும். உணவு மற்றும் விவ சாயத்தில் தன்னிறைவு அடைவதே இதன் குறிக்கோளாகும். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இது கூட்டுறவு சங்கங்களில் தற்போதுள்ள சாகுபடிக்கு கூடுதலாகும். இத்திட்ட த்தை செயல்படுத்த பொது நிதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.50,000 அனுமதிக்கப்படலாம். கூட்டுறவு சங்கங்களின் கீழ் சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கள் உருவாக்கப்படும். சங்க அடிப்படையில் வேளாண் விளைபொருள் சந்தைகள் தொடங்கப்படும். வேளாண் பண்ணைக்காக சங்கத்திற்கோ அல்லது உறுப்பினர் களுக்கோ சொந்த இடமோ, தரிசு நிலமோ, நெல் வயல்களோ இருந்தால் தேர்வு செய்யலாம். விளைபொருட் களை கிராம சந்தைகள் மூலமாகவோ அல்லது வேளாண் விற்பனை மையங்கள் மூலமாகவோ விற்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் சாகுபடி அளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கண்ணூரில் அதிக பண்ணைகள்
கண்ணூர் மாவட்டத்தில், 20 குழுக்களின் உதவியுடன் 75 ஏக்கரில் அதிக சாகுபடி செய்ய பரிந்துரைக்கப் பட்டது. இடுக்கி மாவட்டத்தில் 15க்கும் குறைவான குழுக்களிடம் 10 ஏக்கர் சாகுபடி நிலம் உள்ளது. திருவனந்த புரம் - 40, கொல்லம் - 40, பத்தனம்திட்டா - 35, ஆலப்புழா - 20, கோட்டயம் - 25, எர்ணாகுளம் - 25, திருச்சூர் - 60, பாலக்காடு - 20, கோழிக்கோடு - 40, வய நாடு - 20, காசர்கோடு - 50 ஏக்கருக்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. மலப்புரத்தில் 40 ஏக்கர் விவசாயம் செய்ய முன்மொழியப்பட்டாலும், திட்டத்தை விரிவுபடுத்தி 60 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும். இது 20 குழுக்களால் வழிநடத்தப்படுகிறது. பொன்னானி பகுதியில் பருத்தி சாகுபடிக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் துணைப் பதிவாளரும் தாலுகா அளவில் அலகு ஆய்வாளர்களும் இத்திட்டத்திற்கான நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு குழுவும் எவ்வளவு நிலம், என்னென்ன பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது என அறிக்கை அளிக்க வேண்டும். எத்தனை மாதிரி பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கையை, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தில் மார்ச் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.