சென்னை, ஜூன் 21- தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 15 தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னையில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் இயங்கி வருகிறது. இதில் உள்ள இளங்கலை மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கு நீட், கட் ஆப் மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 500 மருத்துவ இடங்கள் இந்த வருடம் கூடுத லாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவமனை 50 பி.டி.எஸ். இடங் களுடன் இந்த ஆண்டு தொடங்கப் படுகிறது. மேலும் 2 புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக் க்கான இடங்கள் அதிகரிக்கிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 5350 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஆயி ரத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. இந்த இடங்களும் கலந் தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த மாண வர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படு வதால் இந்த ஆண்டும் 500-க்கு மேலான அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நடைமுறை ஓரிரு நாட்க ளில் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பின்னர் மதிப்பெண் வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந் தாய்வு நடத்தப்படும். ஜூலை மாதத் திற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக் கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.