திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் கலந்து கொண்டு சங்கரய்யா படத்தை திறந்து வைத்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டு உணர்ச்சிமிகு முழக்கம் எழுப்பினர்.