tamilnadu

5 மாநில தேர்தல் முடிந்தது; பெட்ரோல் விலை உயர வாய்ப்பு?

சென்னை, மார்ச்.7-  ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதே நேரம் 5  மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் விலை உயரும் அபாயத்தை மறைமுகமாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடியின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வர உள்ளதாக கூறிய அவர், தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த தாக ஒன்றிய அரசை சாடி இருந்தார். இந்நிலை யில், திங்களன்றுடன் 5 மாநில தேர்தல் முடிவுக்கு வருவதால் எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாகனங் களில் பெட்ரோல் டேங்குகளை மக்கள் நிரப்பி வரு கின்றனர்.