tamilnadu

img

எல்ஐசி முகவர்களுக்கு நலவாரியம் அமைத்திடுக!

சென்னை, ஜூலை 16-   எல்ஐசி முகவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது. எல்ஐசி  முகவர்களை ஒன்றிய அரசு  2008 ஆம் ஆண்டு முறைசாரா தொழிலாளர்களாக அங்கீ கரித்துள்ளது. அதன் அடிப்படையில் 2018 இல் கேரள இடது ஜன நாயக முன்னணி அரசு, எல்ஐசி முகவர்களுக்கு நல வாரியம் அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1.5  லட்சம் எல்ஐசி முகவர்களுக்கு  நலவாரியம் அமைக்க வேண் டும் என வலியுறுத்தி  சென்  னையில் தமிழக தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனை சந்தித்து  கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத் தின் (லிகாய்) தென் மண்டல தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான  ஏ.வி. பெல்லார் மின், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ. கலாம், தென்மண்டல செயல் தலைவர் எம்.செல்வ ராஜ்,  தென் மண்டல செயலா ளர்கள் கே.தாமோதிரன், டி.கே.வெங்கடேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.