tamilnadu

img

ஆரஞ்சு புழு, வண்டுகள், கொசு தாக்குதலால் நிலக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மல்லிகைப்பூ செடிகள் நாசம்

திண்டுக்கல்,  ஜூலை 21-   நிலக்கோட்டை பகுதியில் மல்லிகைப் பூக்களில்  ஆரஞ்சு புழு தாக்குதல் தொடர்வ தால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயி ரிடப்பட்டுள்ள செடிகள் நாசமாகிவிட்டன. ஆறு மாதங்களாக பூ வரத்து இன்றி விவ சாயிகள்  நஷ்டமடைந்துள்ளனர்.  தற்போது ஆடுமாடுகளுக்கு உணவா கிறது மல்லிகை பூச்செடிகள்.  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் முருகத்தூரான்பட்டி, மாலையக்கவுண்டனூர்,  குல்லக்குண்டு, எத்திலோடு,  சிலுக்குவார்பட்டி,  நிலக்கோட்டை,  முசுவனூத்து உள்ளிட்ட பல  கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக மல்லிகை பூ உற்பத்தி பிரதான விவசாயமாக உள்ளது.  கடந்த இரண்டாண்டுகளாக 15 தினங் களுக்கு மூன்று முறை  மகசூல் கிடைத்து வந்தது. தற்போது கடந்த ஆறு மாத காலமாக செடிகளில் ஆரஞ்சு நிற புழுத் தாக்குதல் உள்ளது. இதனால் பூக்கள் பூக்கவில்லை.   கொசு மற்றும் வண்டுகள் தாக்குதலால் பூக்களின் உள்ளே புழுக்கள் நிறைந்துள்ளன. இதனால் பூச்செடிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.  இவற்றிலிருந்து மல்லிகை செடி களைக்  காப்பாற்ற விவசாயிகள் பலதரப் பட்ட பூச்சிமருந்துகளை வாங்கி உப யோகித்தும் பூச்சிகளும்,  புழுக்களும் சாக வில்லை. பூச்செடிகளைக் காப்பாற்ற மஞ்சள் நிற இனக்கவர்ச்சி பொறி அட்டை களில் பசைகளை தடவி கொசுக்களை ஒழிக்கும் முயற்சியும் பலனளிக்க வில்லை. இதனால் ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் மகசூல் கிடைக்கவில்லை. 

ஆடுகளுக்கு தீவனமான செடிகள்

மல்லிகைப்பூ தோட்டத்தை புழுக்கள்,  நோயிலிருந்தும் காக்க மல்லிகைப்பூ செடிகள் ஆடுகளுக்கு தீவனமாக மாறியுள்ளது. பெரிய நிறுவனங்கள் பெயரில் போலியான பூச்சி மருந்துகள்  விற்கப்படு வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பூக்கள் மகசூலை எதிர்பார்த்து வட்டிக்குக் கடன் வாங்கி பூச்சி மருந்து தெளித்தும், உரங்கள்  பயன்படுத்தியும் நோய்த் தாக்கு தல் கட்டுப்படவில்லை. பூக்கள் வரத்தும் இல்லை. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட மல்லிகைத் தோட்டங்க ளை காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண் அறிவியல் தொழில் பாது காப்பு வல்லுநர் ஷாகிந்தா, தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் நம்பி ஷோபனா மற்றும் உதவி அலுவலர்கள் மாரிமுத்து,  கோபாலகிருஷ்ணன் உள்ளிட் டோர் கள ஆய்வு மேற்கொண்டனர். 

வேம்பு சார்ந்த மருந்துகளைத் தெளித்திடுக!

இதுதொடர்பாக ஷாகிந்தா கூறிய தாவது: மொட்டு ஈ,  வெள்ளை ஈ  ஆகியவைகள் மல்லிகை பூக்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை ஆய்வு செய்தோம். ஆரஞ்சு கலர் ஈ ஆங்கிலத்தில் வால்சம் விஜ் என்று சொல்வார்கள். மொட்டு உருவாகும் சமயத்தில் தாய் ஈ அந்த மொட்டில் அமர்ந்து முட்டையிடும். ஒரு ஈ 60 முட்டைகளிடும்.  அந்தப் புழுக்கள்  மொட்டுக் காம்புகளை கருக வைத்துவிடும்.  இதனால்  பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படும். இலை, தண்டுகளில் பாதிப்பு இருக்காது. பூவில் மட்டும் பாதிப்பு இருக்கும். இந்த ஈ பெருக்கம் அதிகமாக உள்ளது. இதைத் தவிர்க்க மொட்டு உரு வாகும் சமயத்தில் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறியை ஒரு ஏக்கருக்கு பத்து இடங்க ளில் வைத்தால் இந்த ஈக்கள் ஈர்க்கப்பட்டு அட்டையில் ஒட்டிக்கொள்ளும். இதற்கு வேம்பு சார்ந்த மருந்துகளைத் தெளிக்க வேண்டும். இது பூச்சி விரட்டியாக செயல்படும்.  குளோரோகிளாரிக்ரோல் என்ற மருந்து கடைகளில் கொராஜன் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இதை ஒரு  லிட்டருக்கு அரை மில்லி  ஒட்டு பசையைக் கலந்து அடித்தால்  ஈக்கள் கட்டுப்படும். விவசாயிகள் ஒரு மருந்தை பல முறை அடிக்கிறார்கள். அப்படி அடிக்கக்கூடாது. 15 நாட்கள் கழித்து வேறு ஒரு மருந்தை அடிக்க வேண்டும். லார்வின் என்ற மருந்தை தெளிக்க வேண்டும். அது இல்லையென்றால் ஸ்பினோசர் தெளிக்க வேண்டும். இந்த மருந்து கடைகளில் டிரேசர் என்ற பெயரில் விற்கப்படுகிறது. ஒரு மருந்தை திரும்ப பயன்படுத்தாமல் மாறி மாறி அடிக்க வேண்டும். அப்படி செய்தால் ஈயை கட்டுப்படுத்தலாம். அதே போல் வெள்ளை ஈ கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. செடிகளில் கூட்டமாக உட்கார்ந்து சாறுகளை உறிவதால் செடிகள் சத்து இழந்து மஞ்சள் நிறமாக தெரிகிறது. இதனை கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த மருந்துகளை பயன்படுத்த லாம். இதற்கு ஊடுருவி மருந்துகளான டையோகுளோபிரைடு, அசிட்டாமித் பிரைடு,  ஆக்ட்ரா போன்ற  மருந்துகளை பயன்படுத்தலாம். மருந்துகளை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். விவசாயி கள் இந்த ஆலோசனைப்படி செய்தால் செடிகளை பாதுகாக்கலாம். இவ்வாறு ஷாகிந்தா தெரிவித்தார். 

 விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ராமசாமி கூறுகை யில், நிலக்கோட்டைப் பகுதியில் பூ விவசா யம் தான் பிரதானமாக உள்ளது. மதுரை  மல்லிகைக்கு அடுத்தபடியாக நிலக்கோட்டை மல்லிகைபூ பிரபலமானது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.   நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி,  கொடைரோடு,  டோல்கேட் பகுதிகளில் பேருந்துகள் மற்றும் கார்களில் செல் வோரிடம்  பெண்கள் தாங்கள் கட்டிய பூக்க ளைக் கொண்டு விற்று ஜீவனம் செய்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் பூச்சி தாக்குதலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் மல்லிகை பூ செடிகள் நாசமடைந்துள்ளது. விவசாயி கள் பெரும் வேதனையில் உள்ளனர். இந்தப் பகுதியில் போலி மருந்துகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

-இலமு திண்டுக்கல்