மணிப்பூரில் அரங்கேற்றப்பட்டுள்ள மதவெறி படுகொலைகளை தடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும், பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சிகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 11) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா , திமுக பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.