சென்னை, ஜன. 31- எல்ஐசியை தனியார்மயமாக்கி னால் சமூக பாதுகாப்பு கேள்விக்குறி யாகும் என பொதுத்துறை மற்றும் பொது சேவைகளுக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், ஒருங்கிணைப் பாளர் தாமஸ் பிராங்கோ ஆகியோர் சென்னையில் திங்களன்று (ஜன.31) செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு ஒன்றிய அரசு எந்த முதலீடும் செய்யவில்லை. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் அதன் பாலிசி தாரர்கள் எண்ணிக்கை 40 கோடி ரூபாயாகவும், பிரிமிய வருமானம் 4 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. தற்போது அதன் சொத்து மதிப்பு 38 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.
அரசுடமையாக இருந்தாலும் 95 விழுக்காடு உபரியை பாலிசிதார களுக்கு பகிர்ந்தளிக்கிற ஒரே நிறு வனம் எல்ஐசி மட்டும்தான். மேலும் பாலிசிதாரர்களின் நீண்டகால சேமிப்பிற்கான பாதுகாப்பையும், பத்திரத்தையும் உத்தரவாதம் அளித்துள்ளது. லாபப் பகிர்வு இல்லா பாலிசிகள் மூலம் கிடைக்கும் உபரி உட்பட, எல்.ஐ.சி யின் லாபத்தில் 95 விழுக்காட்டை பாலிசி தாரர்களுக்கு போனசாக வழங்கி வரு கிறது. அதன் மூலதனம் 100 கோடி யாக உயர்ந்தது 95 கோடி பாலிசி தாரர்களால்தான். அதன் ஒட்டு மொத்த சேமிப்பும் உபரியும் பாலிசி தாரர்களால் உருவானதுதான். தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும், அரசு தன் பங்குகளை 50 விழுக்காடாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மல்ஹோத்ரா குழு அளித்த பரிந்துரைக்கு எதிராக எல்ஐசி ஊழியர் சங்கங்கள் கடந்த 25 ஆண்டு களாக போராடி வருகின்றன. எல்.ஐ.சி பங்கு விற்பனை மூலம் அந்த பரிந்து ரையை நிறைவேற்ற உள்ளது ஒன்றிய அரசு. இன்சூரன்ஸ் துறை யில் தற்போது தனியார் நுழைய 2001 அனுமதி அளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்களால் காலூன்ற முடியவில்லை. பெருந்தொற்று காலத்திலும் கூட எல்.ஐ.சி. 554 விழுக்காடு பாலிசிகளை அதி கரித்துள்ளது.
மேல்பூச்சு அறிவிப்பு
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை உரையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு கள் விற்பனை செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். அதன் 25 விழுக்காடு பங்குகளை 5 ஆண்டு களில் தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக பங்கு விற்பனை யில் 10 விழுக்காடு பாலிசிதாரர் களுக்கு ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த பங்கு விற்பனையில் பெரும்பாலான பாலிசி தாரர்களுக்கு கலந்து கொள்ளும் அளவிற்கு பொருளாதார சக்தி கிடை யாது. பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீடு என்பது வெறும் மேற்பூச்சுதான். இந்த பங்கு விற்பனை மூலம் எல்ஐசி நிறு வனத்தை ஒன்றிய அரசு அழிக்கப் பார்க்கிறது. அரசின் கட்டமைப்புத் தேவை களுக்கும், சமூக நலத் திட்டங் களுக்கும் நிதியளிப்பதில் எல்.ஐ.சி. முக்கியப் பங்கு வகிக்கிறது. அது மிகப் பெரிய அளவில் கிராமப்புறங் களை சென்றடைந்துள்ளது. இந்நிலையில் எல்.ஐ.சி. தனியார்மய மானால் இடஒதுக்கீடு இருக்காது. பணத்திற்கான சமூக பாதுகாப்பும் கிடைக்காது. ஒன்றிய அரசின் இந்த முடிவு எல்.ஐ.சி போன்ற பாரம்பரி யமான நிறுவனத்தின் நலனுக்கும் பாலிசிதாரர்களின் நலனுக்கும் இந்த தேசத்திற்கும் பெரும் ஊறு விளைவிக்கும் பேரழிவு நடவடிக்கை யாகும்.
யாருடைய நலனுக்காக?
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு விரும்பு கிறது. ஆனால் ஆதித்ய பிர்லாவுக்கு உதவ வோடஃபோனில் அது முதலீடு செய்கிறது. யாருடைய நலன்களை ஒன்றிய அரசு பாதுகாக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஒட்டு மொத்த நிறுவனமும் பாலிசிதாரர் நிதி மூலமே விரிவடைந்துள்ள நிலையில், அரசு அந்த தொகையை தற்போதைய, முந்தைய பாலிசி தாரர்களுக்கு திருப்பித் தருமா அல்லது பாலிசிதாரர்களின் செல்வா தாரத்தை புதிய பங்குதாரர்களுக்கு மடை மாற்றம் செய்யுமா என்ற கேள்வி எழுகிறது. ஒன்றிய அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி மன்றத்திற்கு சென்றாலும் பலன் கிடைக்காது. ஊழியர்கள் மட்டும் போராடினாலும் இதைத் தடுக்க முடியாது. எனவே பொதுமக்களும் இது நம்முடைய சொத்து என நினைத்து இணைந்து போராடினால் தான் இதை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இச்சந்திப்பின் போது, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் பி.செந்தில்குமார், துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், பொருளாளர் கோபிநாத், இந்திய வங்கி ஊழியர் சம்மேளத்தின் தலைவர் சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் ராஜகோபால், டி.ஆர்.இ. யூ துணைத்தலைவர் ஆர்.இளங்கோ, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி 1இன் பொதுச் செய லாளர் எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் இருந்தனர். முன்னதாக “மக்களின் சேமிப்பு யார் கைகளில்?” என்ற சிறு பிரசுரம் வெளியிடப்பட்டது.