tamilnadu

img

பிஎஸ்என்எல் -க்கு 4ஜி சேவை வழங்குக!

தூத்துக்குடி, மார்ச் 25 தூத்துக்குடியில் அகில இந்திய பிஎஸ்என்எல் - டாட் ஓய்வூதியர் சங்கத்தின் 6வது மாநில மாநாடு அழகர் மஹாலில் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் நடை பெறுகிறது. வெள்ளியன்று முதல் நாள் நிகழ்ச்சியாக தேசியக் கொடியினை மாநில உத வித் தலைவர் ராமசாமி ஏற்றி வைத்தார்.  சங்க கொடியி னை அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராஜ் ஏற்றிவைத்தார். பின்னர் நடைபெற்ற பொது அரங்கு மாநாட்டில் மாநில தலைவர் நரசிம்மன், வரவேற்பு குழு தலைவர் ரசல் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மாநில உதவிச் செய லாளர் அபிமன்யு முன்னிலை வகித்தார். மாநில உதவி செயலாளர் முத்துகுமார சுவாமி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். வர வேற்புகுழு பொதுச் செயலா ளர் ராமர், மாநில செயலாளர் குப்புசாமி ஆகியோர் வர வேற்புரையாற்றினர்.

அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராஜ் துவக்க உரை யாற்றினார். அகில இந்திய துணைத் தலைவர் மோகன் தாஸ், துணை பொதுச் செயலாளர் செல்லப்பா, துணை பொருளாளர் பங்கஜ வள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   பிஎஸ்என்எல் எம்ப்ளா யீஸ் யூனியன் தமிழ் மாநிலச் செயலாளர் பாபு ராதா கிருஷ்ணன், டி என் டி சி டபிள்யூ யூ மாநிலச் செய லாளர் வினோத்குமார் பிஎஸ் என்எல் டபிள்யு டபிள்யு சிசி   மாநில அமைப்பாளர் பெர்லின் ஆலிஸ் மேரி, சென்னை தொலைபேசி மாநில செயலாளர் குப்பன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சீப் ஜெனரல் மேனேஜர் தமிழ்நாடு சர்க்கிள் முரளி தரன், பிரின்ஸ்பல் கண்ட்ரோ லர் ஆப் கம்யூனிகேஷன் அக்கௌன்ட் சென்னை நிரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.  ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் நடராஜன் நன்றி உரையாற்றினார். மாநாட்டில் பிஎஸ்என் எல் ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெய ராஜ் பேசுகையில், பிஎஸ் என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க உடனடியாக அனுமதி வேண்டும், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் மாற்றம் வழங்கியதுபோல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக் கும் வழங்க வேண்டும். மார்ச் 28, 29 அகில இந்திய பொது வேலை நிறுத் தத்திற்கு எங்கள் சங்கம் முழு ஆதரவு வழங்கி போ ராட்டத்தில் பங்கேற்போம்  என்றார்.