பாலக்காடு, மே 29- மினி நவரத்னா என்று போற்றப்பட்ட பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) என்கிற பொதுத்துறை நிறுவனத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான டெண்டர் செயல்முறையை ஒன்றிய அரசு முடித்துள்ளது. இந் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.4,143 கோடி விற்றுவரவு செய்துள்ளது. 2021-22 நிதியாண்டில் பெமலின் வரலாற்றில் அதிக வருவாய் கிடைத்தது. 2020-21இல் ரூ.3,557 கோடியாக இருந்த விற்றுமுதல் 2021-22ல் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. லாபத்தி லும் பெரிய ஏற்றம் ஏற்பட்டது. 2021-22இல் ரூ.206 கோடி. கடந்த ஆண்டு இது ரூ.93 கோடியாக இருந்தது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களை உற்பத்தி செய்யும் பெமல், இந்தியாவில் மெட்ரோகோச் தயாரிக்கும் ஒரே பொ துத்துறை நிறுவனமாகும். பாதுகாப்புத் துறையிலிருந்து ரூ.700 கோடி, சுரங்கம் மற்றும் கட்டுமானத் துறையிலிருந்து ரூ.1,800 கோடி, ரயில் மற்றும் மெட்ரோ துறையிலிருந்து ரூ.1,600 கோடி யும் விற்று வரவாகி உள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான பெமல் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான நட வடிக்கைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இறுதிப் பட்டிய லில் இந்திய நிறுவனமும், வெளிநாட்டு நிறுவனமும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் நான்கு உற்பத்தி அலகுகள், 4,500 ஏக்கர் நிலம் உட்பட ரூ.56,000 கோடி சொத்துக்களைக் கொண்ட பெமல் நிறுவனத்தை ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடிக்கு விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தனியார்மயமாக்கலுக்கு எதிராக பெமல் ஊழியர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் 505 நாட்களைக் கடந்துவிட்டன. கேரளா வில் கஞ்சிக்கோடு பெமல் தலைமை அலுவலகம் முன்பு இப் போராட்டம் நடைபெற்று வருகிறது.