சென்னை,ஜூலை 19- சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை வெள்ளியன்று பகல் 12 மணியில் இருந்து திடீரென முடங்கியது. இணையதளம் சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல் பட்டதால் விமான பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிறுவனங்கள் கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகிய தால் பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விமானங் கள் சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், விமானங்கள் திடீர் தாமதங்களுக்கு என்ன காரணம், எப்போது நிலைமை சீராகும் என்று பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.சென்னை விமான நிலை யத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த இணையதள தொழில்நுட்பக் கோளாறை பொறியாளர் குழுவினர் ஈடுபட்டு சரிசெய்தனர்.