மதுரை, ஜூலை 15 - “சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட சிறப்பு பிரிவுகளுடன் கூடிய தனிச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்!” என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. “தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம்பரியம் மேலும் மெருகூட்டப்பட வேண்டும்” என்றும் வாலிபர் சங்கம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும் மனித சமூக மாற்றத்திற்கு ஆதரவாக நடைபெறும் காதல் திருமணங்களை போற்றும் வகையிலும் “காதலைப் போற்றுவோம்” எனும் காதலர் சங்கமிக்கும் நிகழ்வு ஞாயிறன்று மதுரை காந்தி அருங்காட்சியக திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
ஏ.ஏ. ரஹீம் - சு. வெங்கடேசன்
வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலை வர் ஏ.ஏ. ரஹீம், சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே. சாமுவேல் ராஜ், சமூக செயற்பாட்டாளர்கள் மதன் கௌரி, ரேகா, வாலிபர் சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செய லாளர் ஏ.வி. சிங்காரவேலன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ‘காதலைப் போற்றுவோம்!’ விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: சமூகத்தில் ஏற்பட்டு வரும் கல்வி மற்றும் முதலாளிய, பொருளாதார வளர்ச்சிகள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்து வருவது இயல்பு தான். முற்போக்கு மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளும், செயல்பாடுகளும் சமூகத்தை பண்படுத்தி வருவதும் மெய்யானது தான். ஆனால் சிந்தனை வளர்ச்சிக்கான இந்த முற்போக்கு விழுமியங்களுக்கு எல்லாம் சவால் விடுத்து சாதிய வர்ணாசிரம சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்தின் மீது வலிந்து திணிக்கப்படுவதும், அதன் விளைவாக சாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் உண்மையாகத் தானே இருக்கிறது.
கொலை செய்யப்படும் சாதி மறுப்பு இணையர்கள்!
குறிப்பாக சாதிய வர்ணாசிரம நிறு வனங்களின் மீது சாதி மறுப்புத் திருமணங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே சாதி மறுப்பு இணையர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தம்பதி யினர் அல்லது அவருடைய உறவினர்களை ஊரைவிட்டு வெளியேற்றுதல், தண்டம் விதித்தல், சமூகப் புறக்கணிப்பு செய்தல், பொரு ளாதாரத் தடை விதித்தல், சொத்துக்கள் மீதான உரிமையை மறுத்தல் போன்ற கொடுங் குற்றங்களும் அரங்கேற்றப்படுகின்றன. பெற்றோர்களும், உறவினர்களுமே இங்கே குற்றம் செய்கிற எதிரிகளாக இருக்கிறார்கள். கொலைக்குற்றம் அல்லது கொடும் பாதகம் செய்த பெற்றோர்களையும், உறுவினர்களையுமே எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டிய நிலையில் சாதி மறுப்பு இணையர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்களிடமிருந்து அஞ்சியே காலமெல்லாம் வாழவேண்டிய நிலையில் தள்ளப்படுகிறார்கள்.
கடுமையாக மாறியிருக்கும் நீதிக்கான போராட்டம்!
சட்டவிரோதக் குற்றங்கள் உறவின் பெயராலும், கூட்டாகவும் நடைபெறுவ தால் நீதிக்கான போராட்டம் கடுமையா கிறது. உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் “சட்டப்படி திருமண வயதை அடைந்த விமலா தேவி - திலிப் குமார் தம்பதியினரை அழைத்து வருவதற்கு, கேரளத்திற்கு சிறப்புக் குழுவை அனுப்பியது, அதையும் நாட்குறிப்பில் பதிவு செய்யாதது, கேரளத்திலிருந்து அழைத்து வந்த விவரத்தையும் பதிவு செய்யாதது, காவல் நிலையத்திலேயே கும்பலாக வன்முறையில் ஈடுபட்ட வர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது”- ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை இடித்து ரைத்ததை இங்கே கவனப்படுத்து கிறோம். இது ஏதோ விமலாதேவி வழக்கில் மட்டும் நடைபெற்ற குற்றம் அல்ல. ஏறக்குறைய அனைத்து சாதிமறுப்புக் கொலைகளிலும் நடைபெறுகிற குற்றம்.
சட்ட ஆணையமே பரிந்துரைத்த தனிச் சிறப்புச் சட்டம்
நீதி நிலைநாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வழக்கிலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற இடதுசாரி முற்போக்கு சமூக சீர்திருத்த அமைப்புகளின் பங்க ளிப்புகளும், உழைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சி நடைபெற்ற போது, இந்திய சட்ட ஆணையமே சாதி ஆணவப் படுகொ லைக்கு எதிரான தனிச் சிறப்புச் சட்டம் தேவை என்று பரிந்துரைசெய்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில அரசு சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றியுள்ளது. “ராஜஸ்தான் திருமண இணையர் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் பெயரால் தலையீடு தடுப்பு சட்டம் 2019” (“The Rajasthan Prohibition of Interference with the Freedom of Matrimonial Alliances in the Name of Honour and Tradition Act 2019”) சாதிய ரீதியான திரட்டல் மூலம் ஒரு சமூக நிர்ப்பந்தத்தை, பெற்றோர் - உற வினர் மீதும், சாதி மறுப்புத் திருமண தம்பதியருக்கு எதிராகவும் ஏற்படுத்தப்படு வதை தடுப்பதற்கான அம்சங்களை கொண்டதாக அச்சட்டம் அமைந்திருக் கிறது.
வழிகாட்டும் உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்ற வழக்குகள்
உச்சநீதிமன்றத்தின் சக்தி வாகினி வழக்கிலும் தரப்பட்டுள்ள வழிகாட்டல் கள் சட்ட வடிவம் பெற வேண்டும். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி அமைக்கப்பட்ட மாவட்ட சிறப்பு பிரிவுகளும் செயல்பாட்டிற்கு வர வேண்டும். உடுமலை சங்கர் துவங்கி பல்வேறு சாதி ஆணவப்படுகொலைகள் காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படாததால் நடந்தவை களே. குற்றங்கள் நடைபெறவுள்ள சூழல்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவராக கருதப்படும் நபருக்கோ அல்லது நபர்களுக்கோ தேவையானத் தடைகளை விதிக்கவும். தடையை மீறி னால் அவர்கள் மீது சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கும் வகை செய்யப்பட வேண்டும். சிறப்பு பிரிவுகள் மூலம் கடும் தண்டனை தேவை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதியினர் வாய்மொழியாகவோ எழுத்து மூல மாகவோ காவல் நிலையத்திலோ அல்லது அரசு அதிகாரியிடமோ ஒரு உறுதி மொழியை தெரிவித்த பின்பு அவர்களை பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது அப தாரம் மற்றும் சிறை தண்டனை விதிப்ப தற்கு வகை செய்யப்பட வேண்டும். குற்றவாளிகளில் கொலை செய்தவர்களை இ.பி.கோ 302-இன் படி தண்டிக்கப்படுவது போல் கொலை மற்றும் குற்றங்கள் திட்டமிடுகிற போது உடன் இருப்பவர்களும் கொலை குற்ற வாளியாகவே கருதப்பட வேண்டும். கொலைக்குப் பிறகு அல்லது வன்முறைகளுக்கு பிறகு அதனை புகழ்கிற அல்லது பொதுவெளியில் பகி ரங்கமாக ஆதரிக்கிற நடவடிக்கைகளும் குற்றமாக கருதப்பட வேண்டும். இத்தகைய தன்மைகளோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சிறப்புத் தனிச் சட்டத்தின் பிரிவுகள் அமைய வேண்டும். எனவே சாதிய ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு உடனடியாக சிறப்பு பிரிவுகளுடன் கூடிய தனிச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம்பரியம் மேலும் மெருகூட்டப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட் டுள்ளது. மாநிலப் பொருளாளர் கே. பாரதி தீர்மானத்தை முன்மொழிய, மதுரை மாவட்ட பொருளாளர் வேல் தேவா வழி மொழிந்தார்.