மதுரை, டிச.18- மதுரை ஆனை யூர் செல்லையா நக ரைச் சேர்ந்த மு. பாஞ்சாலி ( வயது 81) என்பவர் சனிக் கிழமையன்று கால மானார். இவர் மதுரை தீக்கதிர் நாளிதழில் விளம்பர பிரிவில் பணி யாற்றும் மு.சங்கரநயினாரின் தாயார் ஆவார். அன்னரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் சி.ராமகிருஷ்ணன், இரா.விஜய ராஜன், மாவட்டச் செயலாளர்கள் மா. கணேசன், கே.ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் பி. ஜீவானந்தம், தீக்கதிர் முன்னாள் ஆசிரி யர் வி.பரமேசுவரன், செய்தி ஆசிரியர் ப. முருகன், மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், திருச்சி பதிப்பு பொது மேலாளர் பன்னீர் செல்வம், அச்ச கப்பிரிவு மேலாளர் கே.பாண்டியராஜன், விளம்பர பிரிவு மேலாளர் ஆர். உமாபதி மற்றும் ஊழியர்கள் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடை பெற்றது. இவருக்கு, எல்ஐசி மு.சங்கிலிநாய கம், மு.அழகர்சாமி, மு.பாலமுருகன் என்ற மகன்கள் உள்ளனர்.