tamilnadu

அரசியல் சாசனத்தை மீறி மேகதாது அணை கட்டுவோம் என்பது பாஜக அரசின் அடாவடித்தனம்

தஞ்சாவூர், மார்ச் 17- அரசியல் சாசனத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மீறி மேக தாது அணை கட்டுவோம் என்று  கர்நாடக மாநில பாஜக அமைச்சர் கள் கூறிவருவது அடாவடித்தன மானது என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்தார். மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலி யுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சா வூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தலைமையேற்று பேசிய பெ.சண்முகம் கூறியதாவது: காவிரி தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு விரோதமாகவும், நடுவர் மன்ற  தீர்ப்புக்கு எதிராகவும், கர்நாடக மாநில பாஜக அரசாங்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேக தாது அணை சம்பந்தமாக உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் இருக்கும்போது, நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய் திருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது. சட்ட விரோதமானது.

 அரசியல் சாசனத்தை மதிக்க மாட்டோம் உச்சநீதிமன்றத்தை மதிக்க மாட்டோம். மத்தியில் எங்களு டைய அரசாங்கம் இருக்கிறது, நாங்கள் அணையை கட்டியே தீருவோம் என்கிற வகையில் அடாவடித்தனமாக கர்நாடக மாநில அமைச்சர்கள் பேசிக் கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், இன்றைக்கு கண்டன  ஆர்ப்பாட்டத்தை நாங்கள் முன் னெடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவ சாயிகள் சங்கங்கள், அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மேகதாது அணை கட்டும் முயற்சி யை முற்றிலும் தடுத்து நிறுத்து வோம்.  அது ஒன்றுதான் தமிழ்நாட்டின் நீராதாரத்தை, பாசன உரிமை யை பாதுகாப்பதற்கான அடிப்படை யான விஷயம். எனவே, எந்தவித மான வேறுபாடுமின்றி, அனைத்து கட்சிகளும், அனைத்து விவசாயி கள் சங்கங்களையும் ஒருங்கிணை க்கும் முயற்சியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்னெடுத்து அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.