செங்கல்பட்டு, ஆக.9- அடுத்த ஆண்டு நடை பெற இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவையும் அதற்கு ஆதரவு கொடுக் கும் கட்சிகளையும் பழங்குடி மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மலை வாழ் மக்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் பெ. சண்முகம் வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச ஆதிவாசிகள் தினம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் 31வது ஆண்டு அமைப்பு தின விழா செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி கிராம இருளர் குடியிருப்பில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.அழகேசன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் பெ.சண்முகம் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், தகவல் பலகையை திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பன்னீர், பொருளாளர் என்.சுப்பிரமணி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், சிபிஎம் செங்கல்பட்டு வட்டச் செயலாளர் கே.வேலன், திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் எம்.குமார், மலைவாழ் மக்கள் சங்கத் தின் பழவேலி கிளை நிர்வாகி கள் சந்துரு, கமலா, ரவி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். பழங்குடியின மாண வர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி மரக் கன்றுகளை நட்டு உரையாற்றிய பெ.சண்முகம், “இந்திய நாட்டில் அரசியல் சாசனத்தை பாதுகாத்திட அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தமிழ்நாட்டில் பழங்குடி ஆதிவாசி மக்கள் தோற் கடிக்க வேண்டும்”என்றார். தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் ஆணையம் தமிழ்நாட்டில் அமைக்கப் பட்டதை வரவேற்கிறோம். இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் உள்ளதை துரிதப் படுத்தி சுயசார்புடன் செயல்பட மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.