காஞ்சிபுரம், டிச. 19 – காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்ட அரசா ணையை திரும்பபெற வலியுறுத்தி பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாது காப்புக்குழு செவ்வாயன்று (டிச.19) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவலன்கேட் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் பேசியதாவது: பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அறிவித்த காலத்திலிருந்தே அப்பகுதி விவசாயிகள் தங்களது எதிர்ப்பினை ஜன நாயக முறைப்படி தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை கிராமம் வாரியாக கேட்பதற்கு பதிலாக, ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அரசாணை விஷயத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வில்லை. மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு விமான நிலையம் அமைப்பதால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் சம்பந்த மாக ஆய்வு செய்வதற்காகத்தான் மச்சேந்திர நாதன் தலைமையில் இரண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் அந்த அறிக்கையை பகிரங்கமாக வெளி யிடுவதில் அரசாங்கத்திற்கு என்ன தயக்கம். ஆகவே உடனடியாக அந்த அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். அரசாணை 210ல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ம் ஆண்டு அடிப்படையில்தான் நிலம் கையகப்படுத்துவதாகவும். அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவதற்கு மட்டும் தான் இந்த அரசாணை பின்பற்றி இருக்கிறதே தவிர, நிலத்தை கையகப்படுத்துவதினால் சமூ கத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் சம்பந்த மாகவும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் சம்பந்த மாகவும் எந்த தரவுகளும் இல்லை.
சுற்றுசூழல் பாதிப்பு
பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பதிமூன்று ஏரிகள், இரண்டு ஆறுகள், ஐந்தாறு கால்வாய்கள் அழிக்கப்பட உள்ளது. இதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை எதுவும் தயாரிக்கப்படவில்லை. சட்டத்தில் இருக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள். உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்கு ஏற்படுத்தக் கூடும் வகையில் உணவு தானியங்கள் விளைவிக்கக்கூடிய இத்தகைய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று 2013 சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கெல்லாம் தெரியும் ‘‘அப்பகுதி முழுவதும் நல்ல நெல் விளைவிக்கும் பகுதிகள், கால்நடை வளர்ப்புகள் அத்தகைய பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதார மாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே எந்தொரு திட்டமாக இருந்தாலும், மக்க ளுடைய வாழ்வாதாரத்தை அழித்து ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஏற்கவில்லை. வாழுகின்ற உரிமை எல்லா மக்களுக்கும் சட்டத்தில் அடிப்படையான உரிமை ஆகவே சட்டத்தின் பல்வேறு அம்சங்களை பின்பற்றாத நிலையில் 2013ன் சட்டத்தின் அடிப்படையில் நிலத்தை கையகப்படுத்துகிறோம்.
என்று அரசாங்கம் சொல்லி இருப்பதே சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் இருப்பதைப் போன்று தமிழ்நாடு அரசாங்கம் செயல்படுவது வன்மையாக கண்டனத்திற்குரியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக அர சாணை 210ஐ திரும்பபெற வேண்டும். சட்டத்தின்படி கிராம மக்களிடையே கருத்து கேட்கும் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் பேசுகையில்; தமிழ்நாடு அரசு பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடர்பாக சமீபத்தில் அரசாணையை வெளி யிட்டது. அதனை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும். மேலும் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் புயல், மழை சீற்றத்தால் விமான நிலையங்கள் வெள்ளத்தால் முடங்கியதை கருத்தில் கொள்ள வேண்டுமென கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என் சாரங்கன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மாவட்டச் செயலாளர் கே.நேரு (தவிச), விவ சாயிகள் ஜி.சுப்பிரமணியன் (ஏகாம்பரம்), டி.குணசேகரன் (நெல்வாய்), கே.முருகன், இ.சங்கர், டி ஸ்ரீதர்,முருகன், அரிகிருஷ்ணன், மகாதேவி, மற்றும் எஸ்.ஆனந்த், என்.நந்தகோபால் இந்த உள்ளிட்டோர் பேசினர்.