ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து, ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித் துறைக்கான நிதியை தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது. அரசியல் சாசனம் உருவாக்கிய வரலாறும் தெரியாது என்பனவற்றை அவருடைய ஆணவப் பேச்சு காட்டுகிறது.
மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது, மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை. இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படு கிறது என்பது அவருக்குத் தெரியுமா? இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும் தந்த உறுதிமொழிகளாவது அவருக்குத் தெரியுமா? நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழி யைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமை யாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.