tamilnadu

img

மக்களாகிய எங்கள் போராட்டம் தொடரும் - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை,ஜனவரி.07- டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டம் தொடரும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், டங்க்ஸ்டன் சுரங்கம் தோண்ட ஒரு பிடிமண்ணைக் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்குத் தெரிவித்திருந்தேன்.
இன்று ஆயிரக்கணக்கான மக்களின் முழக்கமாக அது மாறியுள்ளது. மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் 20 கி.மீட்டருக்கு மேல் நடந்தே வந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மோடி அரசு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை மேலூர் - மதுரை மக்களாகிய எங்கள் போராட்டம் தொடரும் சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.