ரூ.5,800 கோடிக்கு தாதுமணல் கொள்ளை
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், இராஜபாளையத்தில் மே 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன்,, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், என். குணசேகரன் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கன்னியா குமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்க ளில் கடந்த பல ஆண்டுகளாக நடை பெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி 9 ஆண்டுகளுக்கு மேல் விரிவாக விசா ரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன் றம் கடந்த பிப்ரவரி மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தாதுமணல் பிரச்சனையில் நடந்துள்ள முறைகேடுகள், நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள், தாது மணல் சுரங்கங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி, ராயல்டி தீர்மானித்தது போன்றவை களில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் அதிர்ச்சிய ளிப்பதாக உள்ளதால் இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசார ணைக்கு ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கு விசாரணையின் போது நீதி மன்ற வழக்கறிஞர் சுரேஷ் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., சத்ய பிரதா சாஹூ ஐ.ஏ.எஸ். ஆகி யோர் தலைமையில் தனித்தனியாக நடை பெற்ற விசாரணைக்குழு அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து முறைகேடுகளையும் முழுமையாக நீதிமன்றம் ஏற்றுக் கொண் டுள்ளது. “சுரங்க குத்தகை மற்றும் ஒப்புதல் உரிமம் வழங்குவது, போக்குவரத்து அனுமதி, சுரங்க குத்தகையில் மோனோசைட் தனிமத்தை சட்டவிரோதமாக சேர்ப்பது, கண்காணிப்பு இல்லாதது உட்பட மேலிருந்து கீழ்மட்டம் வரை நிர்வாக கட்டமைப்பு மூலம் அரசியல், நிர்வாக, தனியார் சுரங்க குத்தகைதாரர்களிடையே நிலவிய கூட்டுச் சதி, ஊழல் மற்றும் உடந்தைப் போக்கு அனைத்தும் வெளிப்படையாகவே தெரிகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இம்முறைகேட்டில் சம்பந்தப் பட்டுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டுமென தனது உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தனியார் குடோன்களில் வைக்கப் பட்டுள்ள 1.50 கோடி மெட்ரிக் டன் தாது மணலை இந்திய கனிம நிறுவனமான ஐ.ஆர்.இ.எல். இடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள ராயல்டி இழப்பு குறித்தும் முழுமையாக விசாரிப்ப தோடு ஏற்கெனவே நீதிமன்ற வழக்கறிஞர் மதிப்பிட்டுள்ள ராயல்டி இழப்பு ரூ. 5832 கோடியை தமிழக அரசு சுரங்க நிறுவனங்களி டமிருந்து வசூலிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை தொடர்ந்து தமிழக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிபிஐ 7 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இந்நிலையில் முற்றிலும் எதிர் பாராத விதமாக தாதுமணல் வழக்கில் சம் பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்த மேல்முறை யீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் முதல் வழக்கு விசார ணையிலேயே “இப்போது உள்ள நிலை தொடர வேண்டும்” என கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு அனைத்து மேல்நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. அரிய கனிமங்களைச் சுரண்டும் கொள்ளை தொடரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விபரங்களை அறிந்த திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களைக் கொண்ட குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், அரசி யல் செல்வாக்கு செலுத்துவோர், அரசு அதி காரிகள் ஆகியோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் அரிய தனிமங்களை தனிநபர் லாபத் திற்காக காவு கொடுக்கும் இந்த கொள்ளையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என குரலெ ழுப்புமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவி அழைக்கிறது.
மே 20 - தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
ஒன்றிய பாஜக அரசு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பின், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கை களை அமலாக்கி வருகிறது. ஏற்கெனவே, விவசாய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற கோரி ஓராண்டுக்கும் மேல் விவசாயிகள் நடத்திய போராட்டம் ‘திருத்தங்களை வாபஸ் பெறுகிறேன்’ என பிரதமர் மோடியையே அறிவிக்க வைத்தது. ஆனால், தொழிலாளர் சட்டங்களை, கார்ப்ப ரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலா ளர்கள் பாதிக்கப்படும் வகையில் திருத்தி அம லாக்க பல வகையில் முயற்சிக்கிறது. இந்த சட்ட தொகுப்புகளுக்கு எதிராக, வலுவான போ ராட்டங்களை, வேலைநிறுத்தங்களை தொழிற் சங்கங்களும், தொழிலாளர்களும் நடத்தி வரு வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பாராட்டுகிறது. அந்த அடிப்படையில் எதிர்வரும் மே 20 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு ஆதரிக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவ ருக்கும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை, தொழிலாளர் வாரியங்கள் மூலம் தீவிரமாக மேற் கொள்வது, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9000 என அறிவிப்பது, குறைந்தபட்ச ஊதியமாக மாதத்திற்கு ரூ. 26,000/-ஐ அமலாக்குவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, 100 நாள் வேலைக்கான கூலி நிலுவையை வழங்கு வது, கூலியை உயர்த்துவது போன்ற மிக நியாய மான கோரிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு அமலாக்க வேண்டும் என முன்வைத்து அனை த்து மத்திய தொழிற்சங்கங்களும் நடத்தும் பொது வேலைநிறுத்தம் மிகவும் அவசியமானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு குறிப்பிட விரும்புகிறது. இந்த வேலைநிறுத்தத்தை பல்வேறு விவசாய, விவசாயத் தொழிலாளர், மாணவர், வாலிபர், மாதர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களும் ஆதரித்து மறியல் செய்வது என்று அறைகூவல் விடுத்துள்ளனர். எனவே, அனைத்துத் தரப்பு பொதுமக்களும் மேற்படி மே 20 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலில் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.
தூத்துக்குடி என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!
தூத்துக்குடி நகரில் உள்ள என்.டி.பி.எல். 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம், என்.எல்.சி.யின் 89 சத விகித பங்களிப்புடன் செயல்பட்டு வரு கிறது. தமிழ்நாடு மின்வாரியம் 11 சதவிகிதம் பங்களிப்பு செய்து வருகிறது. இதில் 24 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாகவும், 1374 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையி லும் பணியாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக பணி செய்த பின்னரும் நிரந்தரம் செய்யப்படவில்லை. அதுமட்டுமன்றி என்.எல்.சி. நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விடவும், என்.டி.பி.எல். நிறுவனத்தில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ. 300 என்ற அளவில் குறைவாக வழங்கப்படுகிறது. ஒரே வேலையைச் செய்யும் தொழிலா ளர்களுக்கு ஒரே நிறுவனம் பாரபட்சமான ஊதியம் வழங்குவதற்கு எதிராகவும் கோரிக்கை வைத்து, சி.ஐ.டி.யு. தொழிற் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது 22 நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. கடைசி யில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற் சங்கம் வேலை நிறுத்தத்தை கைவிட்டால், பேச்சுவார்த்தை நடத்த முன் வருவதாக தொழிலாளர் துறையில் தெரிவித்து உள்ளது. இது குறைந்தபட்ச அளவில் கூட தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமையை அனுமதிக்காத போக்கு ஆகும். இதுவும் கண்டனத்திற்குரியது ஆகும். மத்திய தொழிலாளர் துறை மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை அமலாக்காமல், நிர்வாகம் மேல் முறையீடு செய்துள்ளது. இது தொழிலாளர்களை வஞ்சிக்கும், உழைப்பு சுரண்டலை தீவிரமாக அம லாக்கும் செயல் ஆகும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர் துறையும், நீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்புகளை அமலாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
புறம்போக்கு மற்றும் நீர்நிலைப்பகுதி குடியிருப்புகளை அகற்றக் கூடாது!
சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், நீர்நிலைப் புறம் போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து வீடுகட்டி குடியிருக்கும் மற்றும் குடிசை வாழ் மக்களை வெளியேற்றுவது நியாயமல்ல. மாநில அரசு உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை காரணமாக கூறி, வெளியேற்றும் செயல்களில் ஈடுபடுகிறது. இப்படியான தீர்ப்புகளுக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால், குடியி ருப்போர் நலச் சங்கங்களும், சம்மந்தப்பட்ட மக்களுமே மேல்முறையீடு அல்லது நீதிமன்ற தலையீடுகளை செய்ய தள்ளப்படுகின்றனர். வணிகம் மற்றும் அரசுத்துறை பயன்பாடுகளுக்கு பொருந்தாத நீதிமன்ற தீர்ப்புக்களை, சாதாரண குடிமனைப் பட்டாக்களுக்கு அமலாக்குவது நியாய மற்றது. குறிப்பாக பொதுச் சொத்துக்களை தனியாரின் சூறையாடலுக்கு அனுமதிக்கும் போக்கு ஆகும். இந்த பாரபட்சமான அணுகுமுறையை கைவிட வேண்டும். எனவே, மாநில அரசு மற்றும் வருவாய்த்துறை சரியான தலையீடு செய்து குடியிருப்புகளுக்கு நியாயம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.