சென்னை, மார்ச் 4 - வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களின் பணியை வரன்முறைபடுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் முகமைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆப்ரேட்டர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். 20 ஆண்டுகளாக பணியாற்றும் 45 பேர் பணி வரன்முறை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், கடந்தகால வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மனுதாரர்கள் 45 பேரையும் பணி வரன்முறை செய்ய உத்தரவிட்டார்.