தலைமைச் செயலாளர்கள் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு
அலட்சியம் காட்டுவதா?
சென்னை, ஜூன் 8 - கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக பிறப்பிக் கப்பட்ட உத்தரவை தலைமைச் செயலாளர்கள் அவமதித்துள்ள தால் அவர்கள் மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு பதிவு செய்ய நீதித் துறை பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 உத்தரவு பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோ ரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்றும் மூன்று மாதங்க ளில் அறிக்கை அளிக்க கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிபதியின் கண்டனம் இந்நிலையில் கருணை அடிப்ப டையில் வேலை வழங்கக் கோரிய மற்றொரு வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 2023 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, 2023 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில் எந்த குழுவும் அமைக்கப் படவில்லை எனவும் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என வும் கூறி தலைமைச் செயலாளரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும் மாநில நிர்வாகத்தின் தலைமை பதவியை வகிக்கும் தலைமைச் செயலாளரே நீதி மன்ற உத்தரவுகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதை அமல் படுத்தவில்லை என்றால், அவருக்கு கீழ் பணியாற்றும் பிற அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத் துவார்கள் என எதிர்பார்க்க முடி யாது என தெரிவித்த நீதிபதி, “அதிகாரிகளின் மெத்தனப்போக் குக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது எனவும் நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடும் பொது மக்களைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை என்பதும் தெரி கிறது” என கண்டனம் தெரிவித்தார். அதிரடி உத்தரவு இதையடுத்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் இது வரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்த வர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவ மதிப்பு வழக்குப் பதிந்து, இது சம்பந்தமாக ஜூன் 20 ஆம் தேதிக் குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதித்துறை பதி வாளருக்கு நீதிபதி பட்டு தேவா னந்த் அதிரடி உத்தரவு பிறப்பித் தார்.