tamilnadu

கோவில் நில ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, பிப். 3 - கோவில் நில ஆக்கிரமிப்புகள், அவற்றை  அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திரிசூலத்தில் உள்ள  திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான  நிலங்கள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. அவற்றை மீட்க அரசுக்கு உத்தர விடக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வியாழனன்று (பிப்.3) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களின் மின் இணைப்பை துண்டிக்கவும், நியாயமான வாடகையை நிர்ணயிக்கவும் பிறப்பித்த உத்த ரவை அமல்படுத்தாத கோவில் செயல் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவுபடி, நடவடிக்கை எடுக்காமல், ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கப் படுகிறது. கோவில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப் பாளர்களுடன் கைகோர்த்து செயல்படு கின்றனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்த னர். கடமையைச் செய்வதற்குதான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. கடமையை செய்யாத  செயல் அலுவலர், ஆணையரின் ஊதியத்தை  ஏன் பிடித்தம் செய்யக் கூடாது? என கேள்வி  எழுப்பினர். கோவில் நிலத்தில் உள்ள 1,640 ஆக்கிரமிப் பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014ஆம் ஆண்டு முதல் கோவில்  செயல் அலுவலர்களாக பணியாற்றி யவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். செயல் அலுவலர்களின் செயல்பாட்டை அறநிலையத் துறை ஆணையர்  கண் காணிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள  கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு களின் விவரம், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணை யருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை இரு வாரங்க ளுக்கு ஒத்தி வைத்தனர்.