ஏசியில் இருந்து வெளியேறும் நீரை சேகரித்து மறு பயன்பாடு செய்யும் ஆலை திறப்பு
சென்னை, ஜூன் 9 - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலு வலகத்தில் குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறு பயன்பாடு செய்யும் ஆலை நிறுவப்பட்டது. இந்த ஆலையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தொடங்கி வைத்தார். நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ராஸ் இந்திய பசுமை கட்டிட கவுன்சில் (IGBC) பிளாட்டினம் தரச்சான்று பெற்றுள்ளது. ஒரு அடித்தளம் மற்றும் 12 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடம் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது. இந்த கட்டிடத்தில் 43 காற்று கையாளும் அலகுகள் மற்றும் கூரையில் தொங்கவிடப்பட்ட 29 அலகு கள் உள்ளன. இவை அனைத்து மாடி களிலும் மற்றும் முக்கியமான அறை களிலும் குளிர்சாதன வசதிகளை வழங்குகின்றன. குளிர்சாதன செயல்பாட்டின் போது, ஈரமான காற்று குளிரூட்டும் காயில்கள் வழி யாக செல்லும் போது நீர்த்துளிகள் வடிகால் தொட்டியில் சேகரிக்கப் படுகிறது. இந்த ஆலை காற்று கை யாளும் அலகுகள் மற்றும் கூரை யில் தொங்கவிடப்பட்ட குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்து வெளி வரும் தண்ணீரை சேகரித்து மறு பயன்பாட்டுக்காக மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் வடி வமைக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி சராசரியாக 10 ஆயிரம் லிட்டர் நீர் பெறப்படுகிறது. இது மொத்த கட்டிட நீர் பயன்பாட்டில் சுமார் 25 விழுக்காடாகும். இந்த திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பராமரிப்பு பிரிவின் கீழ் இயங்கும் மின்சாரம் மற்றும் இயந்திரம் துறையால் ரூ.1.5 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சராசரி 3,650 கிலோ லிட்டர் நீர் பெறப்பட்டு வருடத்திற்கு சுமார் ரூ.6 லட்சம் நீர் கட்டணச் செல வில் சேமிப்பு செய்யப்படுகிறது. இதில் திட்ட இயக்குநர் டி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமை பொது மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.