tamilnadu

img

ஆயிரம் நூலகங்கள் துவங்கும் விழா

திருச்சிராப்பள்ளி, ஏப்.24 - உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங் களுக்கு ரூ.10 லட்சம்  மதிப்புள்ள புத்த கங்களை வழங்கி, ஆயிரம் நூலகங்கள் துவங்கும் விழா மற்றும் பள்ளி மேலா ண்மைக் குழுவின் வழிகாட்டி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். விழா வில் அமைச்சர்கள் கே.என்.நேரு,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகி யோர், ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்களில் நூலகங்களை துவங்க ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்த கங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.  பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர் - மாணவர் இடை யிலான உறவு மேம்பட மாணவர் களுக்கு உரிய ஆலோசனை வழங்கு வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.  தமிழ்நாடு அஸ்ட்ரோனாமிகல் சயின்ஸ் சொசைட்டி மாவட்ட  ஆலோ சனைக் குழு உறுப்பினர் மனோகர் திட்ட விளக்கவுரையாற்றினார். அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீகுமார், கல்லூரி முதல்வர் பால்தயாபரன் உள்பட பலர் வாழ்த்து ரை வழங்கினர். முடிவில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  உதவித் திட்ட அலுவலர் அன்புசேகரன் நன்றி கூறினார். இதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்  வலர்கள் கலந்து கொண்டனர்.