மதுரை, மார்ச் 12- மொழி உரிமை மற்றும் மாநில உரிமை களுக்காக நாம் நடத்தும் போராட்டம் வர்க்க போராட்டமாக மாறும் போதுதான் அந்த உரிமை களை முழுமையாக நிலைநிறுத்த முடியும் என்று தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும், மார்க்சிய ஆய்வாளருமான பேரா.அருணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாட்டினையொட்டி மதுரை யில் வெள்ளியன்று நடைபெற்ற சிறப்பு கருத்த ரங்கில் உரையாற்றிய அவர், மேலும் பேசிய தாவது: “குரங்கிலிருந்து மனிதன் உருவானதற்கு உழைப்பு காரணம்” என்கிறார் பிரடெரிக் ஏங்கல்ஸ். மனிதனின் பிறப்பிற்கு உழைப்பு மட்டும் அல்ல; மொழியும் ஒரு காரணம். மனித குலத்திற்கு மொழி தான் தாய். அந்தத் தாய் மொழிக்கு இப்போது என்ன நிலை என்பது தான் கேள்வி. தமிழகத்தில் தமிழ்மொழி குறித்து பல்வேறு அறிஞர்கள், தலைவர்கள் பேசி வருகிறார்கள். தமிழ்மொழிக்காக உரிமைக்குரல் எழுப்பு கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுக்கி றார்கள். எந்த விஷயத்தையும் தத்துவ ஞானத் தோடு அணுகுபவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். நமக்கு மொழி குறித்துப் பேசக் கூடுதல் உரிமை உள்ளது. வரலாற்றுத் தொன்மையான தமிழ்மொழிக் குப் போராடித்தான் வங்கிகளும், தபால் நிலை யங்களிலும் உள்ள விண்ணப்பங்களில் இப் போது தமிழ் இடம் பெற்றுள்ளது. இதற்கும் கூட நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். நாடாளு மன்ற உறுப்பினர்கள் எந்த மொழியில் கேள்வி அனுப்புகிறார்களோ அதே மொழியில் தான் பதிலளிக்கவேண்டுமென்பதற்காக உயர்நீதி மன்றத்தில் வழக்காடி தான் நமது உரிமையைப் பெற முடிந்தது.
மோடியின் வார்த்தை ஜாலம்
பிரதமர் மோடி மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று பேசுகிறார். சர்க்கரை என பேப்பரில் எழுதி வைத்திருந்தால் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு தயாரில்லை. தமிழ் மொழியின் மீது மோடிக்கு உண்மையிலேயே பாசம் இல்லாத தால் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமி ழைக் கொண்டு வர மறுக்கிறார். கேந்திர வித்யா லயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்றுத் தர மறுப்பது ஏன்? மோடியின் பேச்சு உதட்டளவில் மட்டுமே. அவரது உள்ளத்தில் இருப்பது 0.1 சதவீதம் பேர் பேசக்கூடிய சமஸ்கிருதத்தைத் திணிப்பது தான். சமஸ்கிருதத்தை நேரடியாகத் திணிக்க முடியாத சூழலில் இந்தியை முதலில் திணிக்கின்றனர். பின்னர் சமஸ்கிருதம் திணிக் கப்படும். மோடியின் கொள்கை ஆர்எஸ்எஸ்-அமைப்பின் கொள்கையே.
இந்திய ஒன்றியமும்-ஐரோப்பிய ஒன்றியமும்
பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா வில் எட்டுகோடி மக்கள் பேசும் தமிழுக்கு இட மில்லை என்பது அநீதி. ஒன்றியம் என்று கூறி னாலே மோடி எரிச்சலடைகிறார். இந்தியாவில் 22 மொழிகள் அலுவல் மொழியாக உள்ளன. இந்தியாவில் சாமானியனுக்குப் புரியாத ஆங்கிலத்தில் தான் வழக்காடுகின்றனர். சாமா னியனுக்கு நீதிபதி தமது வழக்கின் மீது என்ன தீர்ப்பு வழங்கினார் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள இயலாத நிலை தொடர்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 24 மொழிகள் அலு வல் மொழிகளாக உள்ளன. அங்கு எந்த மொழி யில் வழக்குத் தொடர்ந்தாலும் அந்த மொழியில் தான் வழக்கு நடைபெறும். தீர்ப்பும் அந்த மொழி யில் வழங்கப்படும். ஐரோப்பிய யூனியன் பிராந் திய மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்திய ஒன்றியத்தில் அதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
வலதுசாரிகளின் பிற்போக்குவாதம்
கம்யூனிஸ்ட்டுகள் தமிழ், தமிழர்கள், தமிழ் நாடு குறித்துப் பேசினால் வலதுசாரி, சமூக செயற் பாட்டாளர், விமர்சகர் எனப் பல பெயர்களில் தோன்றும் ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்க ளுக்குக் கோபம் வருகிறது. சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தேசியம் குறித்துப் பேச என்ன தகுதியுள்ளது; அது கோட்பாட்டிற்கு விரோ தமானது என்கின்றனர். சர்வதேசியம் என்றால் அதில் தேசியமும் அடங்கும். தேசியம் என்றுவருகிறபோது அதில் மொழியும் அடங்கும். சர்வதேசியத்தில் தான் தேசியம் அடங்கியுள்ளது என்பதை பாஜக கூட்டம் ஏற்க மறுக்கிறது.
மோடியை ஆட்டிப்படைக்கும் ஆர்எஸ்எஸ்
கூட்டாட்சித் தத்துவத்திலும் பாஜக முரண்படு கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியா என்பது ஒப்பந்தங்களால் ஏற்பட்டதல்ல; அது இயற்கையாய் உருவானது என்கிறார். ஜம்மு-காஷ்மீர் ஒப்பந்தத்தால் தான் உருவானது. அதையொட்டி தான் சட்டப்பிரிவு 370 ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்த பாஜக அந்த மாநிலத்தை இரு துண்டாக்கி இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது. மொழி வழி மாநிலங்களே கூடாது என எதிர்த்து தீர்மா னம் நிறைவேற்றிய ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ் மட்டும் தான். ஆர்எஸ்எஸ்-தான் மோடியை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு ஜம்மு-காஷ்மீர் ஓர் உதாரணம்.
தேர்தல் ஆணையம்-அமலாக்கப்பிரிவு-அரசியல்
ஒரு மாநிலத்தின் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாத தேர்தல் ஆணையம், ‘ஒரே நாடு- ஒரே தேர்தல் நடத்தத் தயார்’ என்கிறது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு, மோடியின் கொள்கைக்குத் தேர்தல் ஆணையம் ஜால்ரா அடிக்கிறது. பாஜக-வைப் பொறுத்த வரை தேர்தல் என்று வந்துவிட்டால், அவர்கள் முதலில் கூட்டணி அமைப்பது தேர்தல் ஆணையத்திடம்; இரண்டா வது கூட்டணி அமலாக்கப்பிரிவிடம்; மூன்றாவ தாகத்தான் அரசியல் கட்சிகளிடம் கூட்டணி குறித்துப் பேசுவார்கள். பாஜக தனது கோரிக் கைக்காக எத்தகைய மக்கள் விரோத நடவ டிக்கையிலும் ஈடுபடத் தயங்காது. ஒரே நாடு-ஒரே தேர்தல் என வந்துவிட்டால் அப்போது, மாநிலப் பிரச்சனைகள் குறித்து, மாநில உரிமைகள் குறித்துப் பேசப்படாது. பேசக்கூடாது. மாநிலப் பிரச்சனைகள் மக்கள் மன்றத்தின் முன்வைக்காமல் மூடி மறைக்கப் படும். முதலில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பார் கள். பின்னர் மாநிலங்களுக்குத் தேர்தலே தேவை யில்லை எனக் கூறி மாநிலங்களைப் பல துண்டு களாகச் சிதைத்து அதைக் கண்காணிக்கும் பொறுப்பை பாஜக-ஆர்எஸ்எஸ் ஏஜெண்டுகளி டம் ஒப்படைத்துவிடுவார்கள். தொடர்ந்து மக்க ளவைக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். இது மோடியின் விருப்பம் அல்ல; ஆர்எஸ்எஸ் அமைப் பின் விருப்பம்.
வன்கொடுமைக்குள்ளாகக் கூடாது அரசியல் சாசனம்
2024-ஆம் ஆண்டு மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் வன்கொடுமைக்கு உள்ளாகும். மதச்சார்பற்ற இந்தியா என்ற வாசகம் அழிக்கப்பட்டு ‘இந்து ராஷ்ட்ரம்’ அரசு என மாற்றிவிடுவார்கள். அரசி யல் அமைப்புச் சட்டத்தில் வர்ணாசிரம தத்துவ மும், மனுதர்மமுமே இடம்பெறும். மொழி உரிமை-மாநில உரிமைகளுக்காகப் போராடும் அதே நேரத்தில் பாஜக அரசை வீழ்த் தும் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும். தமிழ், தமிழர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளுக் காகத் தொழிலாளி-விவசாயி. மத்தியத் தர வர்க் கத்தினரையும் இணைத்துப் போராட வேண்டும். அது வர்க்கப்போராட்டமாக மாறும்போது தான் நாம் நமது உரிமைகளை நிலை நிறுத்த முடி யும். இவ்வாறு அருணன் பேசினார்.