tamilnadu

img

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணைய வழியில் இடமாறுதல் கலந்தாய்வு

சென்னை,நவ.9- அரசுக் கல்லூரிகளில் பணியாற் றும் ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொது இட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறி வித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறி விப்பு வருமாறு: கல்லூரி கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு கலை - அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள், தொழில்நுட்பக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், சிறப்பு பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி, கல்லூரிகள் ஆசிரி யர்களுக்கு 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுத லுக்கான பொது கலந்தாய்வினை  counseling) உரிய நெறிமுறைக ளைப் பின்பற்றி நவம்பர் 25 ஆம் தேதிக்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதற்கி ணங்க, இணையவழியாகப் பெறப் படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிக ளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும். மேலும், இணைய வழியாக கலந்தாய்வு முடிந்தவுடன், இணைய வழி வாயிலாகவே பணியிட மாறுதல் ஆணைகள் அளிக்கப்படும். கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணியாற்றும் துறை யில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஆசி ரியர்கள் பணியாற்ற வேண்டும். இணையவழியில் விண்ணப் பிக்க நவம்பர் 18 கடைசி நாள் எனவும், www.dcetransfer.in என்ற இணையதள முகவரியில் விண் ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது,