தருமபுரி, நவ. 19 - மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து முனிசிபாலிட்டிகளாக மாற்றவே, ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவர பாஜக துடிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது
நிதி ஆணையத்திடம் சிபிஎம் கடிதம்
ஒன்றிய அரசின் 16-ஆவது நிதிக் குழு சென்னையில் மாநில அரசு மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பிலும், தேசிய - மாநில கட்சிகளின் சார்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் ஆலோ சனைகளைக் கூறி, அதனை கடிதமாக வும் அளித்திருக்கிறோம். மூன்று, நான்கு நிதி குழு வந்திருந்தா லும் ஒன்றிய அரசு மாநில அரசுக்குத் தேவையான நிதிப் பகிர்வை வழங்கி யதில்லை. மொத்த வருவாயில் 50 சதவிகித நிதி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். கடந்த முறை 41 சதவிகிதம் நிதி வழங்குவதாக கூறிய ஒன்றிய பாஜக அரசு 31 சத விகிதத்தைத் தான் மாநிலங்களுக்கு வழங்கியது. அறிவிப்பது ஒன்று நடை முறைப்படுத்துவது ஒன்று என்ற நிலைமை உள்ளது.
மாநில அரசுகள் மீது ஏற்றப்படும் செலவுகள்
ஒன்றிய அரசுத் திட்டங்களுக்குக் கூட நிதி ஒதுக்காமல் அனைத்தையுமே மாநில அரசுகள் மீது திணிக்கின்றனர். வழக்கமாக 1971 மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி நிதியை பகிர்ந்தனர். ஆனால், தற்போது 2011 ஆண்டு கணக் கெடுப்பின்படி நிதியை பகிர்ந்துள்ளனர். இந்தக் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளனர். மக்கள்தொகை குறைவாக உள்ளது என காரணம் காட்டி குறைந்த நிதியை ஒதுக்குகின்றனர். மக்கள் தொகையைக் குறைத்ததற்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் ஆனால், ஒன்றிய பாஜக அரசு தண்டனை வழங்குகிறது. மக்கள் தொகை குறைவதால் முதி யோர் எண்ணிக்கை அதிகமாகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வட இந்தியா வில் இருந்து ஒரு கோடி பேர் வந்து ள்ளனர். அவர்களுக்கான கட்டமைப்பு வசதியையும் தமிழக அரசு செய்ய வேண்டியுள்ளது. இதனையெல்லாம் கணக்கில் கொண்டு மாநில அரசு களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த குழுவின் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்குமா, என்று தெரியவில்லை.
கூட்டாட்சித் தத்துவத்தை மோடி அரசு சிதைக்கிறது
மாநில அரசுகளுக்கு எந்த அதிகார மும் இருக்கக்கூடாது என்று மோடி அரசு நினைக்கிறது. அதனால் தான், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைக்கிறது. மாநிலங்களை ஒரு மேம்படுத்தப்பட்ட முனிசிபாலிடி போன்று ஆக்குவதற்கான சூழ்ச்சிதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம். இதன் மூலம் மாநில உரிமைகளை, கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வேலையை மோடி அரசு செய் கின்றது. ஒன்றிய அரசின் தவறான கொள்கையினால் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகின்றது. கச்சா எண்ணெய்யின் விலை கணிச மாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை பலவீனப்படுத்த, நெல் கொள்முத லில் பல்வேறு நிபந்தனைகள் விதிக் கின்றனர். இந்தப் போக்கு நெல் கொள்முதலை தனியாருக்கு கொடுக்கும் நிலைமையை ஏற் படுத்துகிறது. நெல் கொள்முதல் தனியாருக்கு சென்றால் பொது விநி யோகமும் தனியாருக்கு போகும். இதனை எதிர்த்து தமிழ்நாடு முழு வதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடத்தி வருகிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
சொத்து வரி, மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்
மேலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா, என்று எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், “கிட்டத்தட்ட அப்படியான ஊகங்கள் தான் இருக்கின்றன” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியில் பயணத்தைத் தொடர்கிறது. 2026-இலும் இந்த அணி தொடரும், வெற்றிபெறும். அதே சமயத்தில் திமுக அரசின் திட்டங்கள் மீது சில மாற்றுக் கருத்துகள் உள்ளன. அதுபோன்ற நிலையில், சுட்டிக்காட்டுகிறோம், விமர்சிக்கிறோம், போராடு கிறோம். சாம்சங் தொழிலாளர் பிரச்ச னையில் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய அரசு முன்வரவில்லை, அதேபோல் தமிழ்நாட்டில் சொத்து வரியை வருடத்திற்கு 6 சதவிகிதம் உயர்த்துகின்றனர். எனவே மக்கள் தலையில் ஏற்றப்பட்ட சுமையை இறக்க வேண்டும். சொத்துவரி உயர்வு, சிறு- குறு தொழில் களுக்கான மின்சார கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்
மேலும், “தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி யுள்ளது. மிகக்குறைவான தனிநபர் வருமானத்தைக் கொண்ட மாவட்டமாக தருமபுரி உள்ளது. இங்கு தொழில்வளமும் இல்லை, விவசாய வளர்ச்சியும் இல்லை. பாசனக் கட்டமைப்பு மிக மோச மாக உள்ளது. எனவே காவிரி உபரிநீர் திட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரை வாக நிறைவேற்ற வேண்டும். பொதுவாகவே மருத்துவமனை களில் மருத்துவர் செவிலியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. வேலை செய்பவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்யவில்லை. ஒரு நல்ல விஷயம் என்ன வென்றால் அரசு மருத்துவமனைகளில் நன்றாக சேவையாற்றுகின்றனர். ஆனால் அதிகரித்துவரும் நோயாளிகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக மருத்துவர், செவிலியர், மருத்துவ பணி யாளர்களை பணியமர்த்த வேண்டும். ஏற்கெனவே வேலை செய்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள் கிறேன்” என்றார். பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் ஆகியோர் உடனிருந்தனர்.