tamilnadu

திருப்பத்தூர் வாலிபருக்கு ஒமைக்ரான்

திருப்பத்தூர், டிச. 31 - திருப்பத்தூர் மாவட்டம் கும்மிடி காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபர் துபாயில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி  துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு அவருக்கு பரிசோ தனை செய்யப்பட்டது. வீட்டிற்கு சென்ற அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் ஆய்வு முடிவில் அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதைய டுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை யில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதனை யடுத்து அவரது உறவினர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.