லக்னோ, பிப்.16- உ.பி. மாநில முக்கிய அரசியல் கட்சி களில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் ஒன்றாகும். ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலை மையிலான இந்த கட்சி, தற்போது சமாஜ் வாதி கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், வாரணாசியின் சிவ்பூர் சட்டப்பேரவை தொகுதியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் அரவிந்த் ராஜ்பரின் வேட்பு மனுத் தாக்கல் நிகழ்ச்சியில், கட்சித் தலை வரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த ஓம் பிரகாஷ் ராஜ்பர், உ.பி. முதல்வர் யோகிஜி என் னைக் கொலை செய்ய திட்டம் போடு கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். “யோகி ஜி என்னைக் கொல்ல விரும்பு கிறார். இதற்காக, பாஜக மற்றும் யோகி யின் குண்டர்கள் கறுப்புக் கோட் அணிந்து வேட்புமனு தாக்கல் இடத்திற்கே அனுப்பப்பட்டனர்” என்று ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்துள்ளார்.