tamilnadu

img

பழைய ஆட்சியர் அலுவலகம் புனரமைக்கும் பணி தீவிரம்

பழைய ஆட்சியர் அலுவலகம் 
புனரமைக்கும் பணி தீவிரம்

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ.16.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கடலூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 120 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஆட்சியர் அலு வலகம் உள்ளது. தற்போது தென்பெண்ணை ஆற்றின் கரையில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட செயல்பட்டு வருகிறது. இதனால் பழைய  அலு வலகத்தில் மாவட்ட கருவூலம், அருங்காட்சி யகம் வனத்துறை உள்ளிட்ட அலுவல கங்கள் செயல்படுகிறது. இந்நிலையில் பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம் முறையான பரா மரிப்பின்றி சேதமடைந்து. இதனால் பாரம்பரிய சின்னமான  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பழைய ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பிக்க ரூ.16.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட  ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்   அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது அவர் சீரமைப்பு பணி களை விரைந்து தொடங்க வேண்டும் எனவும், கட்டிடத்தின் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் எனவும் அங்கிருந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  அதனைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச்சில் சுமார் ரூ.4 கோடியில் அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருவதையும், பூங்கா கட்டுமானப் பணியையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் அனு, கோட்டாட்சியர் அபிநயா, தொல்லியல் துறை செயற்பொறியாளர் நாராயண மூர்த்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, உதவி பொறியாளர் திவ்யபாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.