வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அறிவிப்பு
சென்னை, டிச. 21- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் (ஓஎச்டி), தூய்மை பணி யாளர், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சிகளில் பணியாற்றும் ஓஎச்டி இயக்குபவர், தூய்மை காவ லர்கள், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி செவ்வா யன்று (டிச.21) பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. சென்னை யில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊராட்சி ஓஎச்டி ஆப ரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப் புக்குழு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஓஎச்டி இயக்குபவருக்கு 1400 ரூபாய் ஊதியம் வழங்குவதற்கான அரசாணை அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு அமலாக்கப்பட வில்லை. அந்த அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண் டும், ஊராட்சி பணியாளர்களுக்கு ஜூன் மாதம் கொரோனா கால ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாயை வழங்கவேண்டும். ஓஎச்டி இயக்குபவர், தூய்மை பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, உயிரிழந்த தொழி லாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். தூய்மை காவ லர்களை பணி நிரந்தரம் செய்து 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் தர வேண்டும். ஓஎச்டி இயக்குபவர் ஓய்வு பெறும்போது பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊராட்சி ஊழியர்கள், ஓஎச்டி இயக்குபவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உய ர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும், ஓஎச்டி இயக்குபவர் களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க வேண்டும்; சம்பள நிலுவைகளை வழங்குவதோடு, மாதாமாதம் ஊதியம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத் தில் வலியுறுத்தப்பட்டன.
வேலைநிறுத்தம்
இந்தப்போராட்டத்தில் பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், குறைந்தபட்ச ஊதி யம் 21 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி பிப்ரவரி 23, 24 தேதி களில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் உள்ளாட்சி ஊழியர்களும் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆர்.கணே சன் பேசுகையில், நிதி நெருக்கடி யை காட்டி, ஊழியர்களின் கோரி க்கைகளை அரசு உதாசீனப்படுத்தி னால், சட்டமன்றக் கூட்டம் நடை பெறும்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். போராட்டத்திற்கு சம்மேளன தலைவர் ஏ.ஜி.சந்தானம் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் பா. பாலகிருஷ்ணன் (தென்சென்னை), சி.திருவேட்டை (மத்தியசென்னை), ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் எம்.பன்னீர்செல்வம், துணைச் செய லாளர் கே.ரங்கராஜ், சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்க துணைப் பொதுச் செயலாளர் ராஜன் உள்ளிட் ட்டோர் பேசினர்.