விழுப்புரம்,செப்.2- கோவையில் அக்டோர் 2 மற்றும் 3 ஆம் தேதி நடைபெறும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் மாநாட்டிற்கான இலச்சினையை விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டார். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் செப்.2 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பி.ராமு தலைமை தாங்கினார்.அக்டோபர் 2, 3 ஆகிய தேதிக ளில் கோவை நடைபெறும் 5வது மாநில மாநாட்டிற்கான இலச் சினையை சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.திரு செல்வன் வெளியிட்டார். நிர்வாகி கள் கே.பி.ராமு, ஜான்.அந்தோணி ராஜ் பொருளாளர் சதீஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் வேல்முரு கன், துணைத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன், மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். கணபதி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியிட மாறுதலுக்கு கொள்கை வகுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.