முதலமைச்சர் அறிவிப்பு புதுச்சேரி,அக்.16- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அக்டோபர் 16 அன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: அக்டோபர் 21 ஆம் தேதி புதுச்சேரியில் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ரேசனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி, மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகை ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப் பட்ட உதவித்தொகை முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப் படும். கோவில் நிலங்கள் தொடர்பான விவரங்களை ஆன்லைனில் வெளியிடும் பட்டியல் விரைவில் வெளி யிடப்படும். அதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
புதுச்சேரியில் ரேசன்கடை களில் கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த நாராயணசாமி, அன்றைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இலவச அரிசியை வழங்குவதற்கு மாறாக நேரடி பண பரிமாற்றத் திட்டத்தை கிரண்பேடி அறிவித்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தியது. மேலும், நேரடி பணம் வழங்கும் முறையை எதிர்த்து முதலமைச்சர் நாராயணசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டுகளாக ரேசன் கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்த கடைகளை திறந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வந்தது. பிறகு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி தலைவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அக்டோபர் 21 ஆம் தேதி ரேசன்கடைகளில் திறக்கப்படுகிறது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.