tamilnadu

விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், இளவரசி ஆஜர்

சென்னை, மார்ச் 21-  மெட்ரோ ரயில் திறப்பு விழா வுக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று ஓ. பன்னீர்செல்வமும், மருத்துவ மனையில், ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உட னிருந்து பார்த்துக் கொண்டார் என இளவரசியும் நீதிபதி ஆறுமுக சாமியின் விசாரணை ஆணையம் முன்பு தெரிவித்துள்ளனர்.  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெய லலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வீட்டில் வேலை செய்த பணியாளர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.  95 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில், ஜெயலலிதா இறக்கும் போது முதல்வராக இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆணையத்தின் சம்மன்படி ஒரு நாள் கூட ஓபிஎஸ் நேரில் ஆஜராகவில்லை.  இந்நிலையில், இறுதிக்கட்ட விசாரணையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பிய முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அப் பல்லோ மருத்துவமனையில் ஜெய லலிதாவுடன் 75 நாட்கள் உடனிருந்த சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடம் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது.  இதன்படி ஓபிஎஸ் மற்றும் இளவரசிக்கும் விசாரணை ஆணை யம் சார்பில் திங்களன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இளவரசி ஆகியோர் விசாரணைக்காக ஆஜரானர். அப்போது ஓ.பன்னீர்செல்வத் திடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணையில் அவர் கூறியதாவது,

 ‘‘மெட்ரோ ரயில் திறப்பு விழா வுக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. சொந்த ஊரில் இருந்த போது நள்ளிர வில் உதவியாளர் மூலம் ஜெய லலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன். மருத்துவமனை சென்ற போது தலைமைச் செயலாளரிடமே விவரங்களை கேட்டறிந்தேன்.  துணை முதலமைச்சர் என்ற அடிப்படையிலேயே விசார ணை ஆணையக் கோப்பில் கையெழுத்திட்டேன். ஜெய லலிதாவுக்கு நீரிழிவு நோய் தவிர வேறு நோய் எதுவும் இருந்ததா என்பது பற்றி எனக்கு தெரியாது. 2016 செப்டம்பர் 22-ல் ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரி யாது. சர்க்கரை நோய் தவிர்த்து  அவருக்கு இருந்த உடல் உபாதை களைப் பற்றி எனக்கு எதுவும் தெரி யாது. மேலும் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தனக்கு தெரியாது’’ என்று அவர் கூறினார்.  இதேபோல், இளவரசியிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசா ரணையின் போது, ‘‘மருத்துவ மனையில், ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார்; நான் 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்தேன். ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் என்று கூறினார்.