tamilnadu

img

நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது

சென்னை, மார்ச் 19 - தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளியன்று (மார்ச் 18) சென்னையில் சங்கத்தின் தலைவர் சு.கலா,  செயலாளர் ஏ.மலர்விழி, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலமுறை ஊதியம், 9ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்க ளுக்கு வழங்குவது போல் பணிக் கொடை அல்லது அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாய், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாயை பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக நீண்ட காலமாக போராடி வருகிறோம். இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகளை செய்யாதது ஏமாற்ற மளிக்கிறது. சத்துணவு ஊழியர்களின் 39 ஆண்டுகால வாழ்க்கை போராட்டத்தில் விடியலை ஏற்படுத்தும் வகையில் முதல மைச்சர் தலையிட்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் உரிய அறிவிப்புகளை செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்;  நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.