tamilnadu

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

பெரம்பலூர்/திருவாரூர்/அறந்தாங்கி, ஜூன் 11-  பெரம்பலூர் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவ னத்தின் மூலம் பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந் தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஒன்றி யங்களில் ஒன்று முதல் ஐந்து வரை கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரி யர்களுக்கு எண்ணம் எழுத்தும் பயிற்சி ஆனது ஜூன் 10 முதல் 13  ஆம் தேதி வரை அந்தந்த ஒன்றியங் களில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி  நிறுவன முதல்வர் முனைவர் ராம ராஜ் தலைமை பொறுப்பேற்று நடத்தினார். பெரம்பலூர், வேப்பந் தட்டை ஒன்றிய ஆசிரியர்களுக்கு தந்தை ஹேன்ஸ் ரோவர் நர்சிங் கல்லூரியிலும், ஆலத்தூர் ஒன்றிய ஆசிரியர்களுக்கு ஆலத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், வேப்பூர் ஒன்றிய ஆசிரியர்களுக்கு வேப் பூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத் திலும் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியின் கருத்தாளர் களாக கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி  அளித்து வருகின்றனர். பயிற்சி யினை மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர், மாவட்ட கல்வி அலுவ லர், மாவட்ட உதவி திட்ட அலுவ லர், வட்டார கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம், வலங் கைமான் ஒன்றியத்தில் அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளில் பணியாற்றும் தொ டக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி யது. முதல் நாள் பயிற்சியை வலங் கைமான் வட்டாரக் கல்வி அலுவ லர்கள் சுகந்தி மற்றும் குமரேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சிக்கான நோக்கங்கள் பற்றி  வட்டார வளமைய மேற்பார்வையா ளர் ரவிச்சந்திரன் ஆசிரியரிடம் விளக்கினார். இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களை அரும்பு, மொட்டு, மலர்  என மூன்று குழுக்களாகப் பிரிக்கப் பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய படங்களை கதை, பாடல், படித்தல், எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  அரசு, அரசு உதவிபெறும் தொடக்க  மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத் தும்’ திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டு உள்ளது. வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்ற முதல் நாள் பயிற்சி யில் 88 தொடக்கப்பள்ளி ஆசிரி யர்கள்  கலந்துக் கொண்டனர். அறந்தாங்கி ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை, புதுக் கோட்டை மாவட்டம் மணமேல்குடி  வட்டார வளமையத்தில், மண மேல்குடி வட்டார கல்வி அலுவலர்  செழியன் தலைமையில் தொடங்கி யது. மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ)  சிவயோகம் முன்னிலை வகித்தார்.  எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்து  வந்த பாதை குறித்தும், முதல் பருவத்திற்கான தொடரும் செயல் பாடுகளை குறித்து விளக்கம், முதல் பருவத்தில் புதிய செயல் பாடுகள் என்னென்ன கொடுக்கப் பட வேண்டும் என்ற விவரமும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பீடு தொடர்பான விளக்கமும், வகுப்ப றையில் மாணவர்கள் சுயமாக செயல்பாடுகளை செய்து பார்ப்ப தற்கும், தானே கற்றல் குறித்த  விளக்கமும், எண்ணும் எழுத்தும்  திட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங் கள் குறித்த விளக்கமும் ஆசிரி யர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்தாளர் களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் சசி குமார், பன்னீர்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் திரகனிவளவன், செபஸ்தியான் ஆகியோர் செயல் பட்டனர்.