திருவண்ணாமலை,ஜூலை 31- பட்டு கைத்தறி தொழிலை பாது காக்க வலியுறுத்தி நெசவாளர் தினத்தில் வருகிற 7 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நெசவாளர்கள் வீடு களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆரணியில் நடைபெற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் கைத்தறி சம்மேளனம் (சிஐடியு) பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார் அறி வித்தார். விசைத்தறியில் (பவர்லூம்), தடை செய்யப்பட்ட பட்டுச் சேலை ரகங்களை உற்பத்தி செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள், நெச வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆரணி மணிக்கூண்டு அருகே திங்களன்று (ஜூலை 31) உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது.
நெசவாளர் பரமாத்மன் தலைமை வகித்தார். சிஐடியு திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் இரா.பாரி, நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், காங்கேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாநிலைப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசிய கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார், “பட்டு கைத்தறி தொழில் 72 விதமான நுட்பங்களை கொண்டு 2500 ஆண்டுகள் பாரம்பரிய மானது” என்றார். நமது நாட்டில் காசி, காஞ்சிபுரம், ஆரணி ஆகிய பகுதிகளில் பட்டு கைத்தறி துணிகள் உற்பத்தி நடை பெற்று வருகிறது என்றும் நெச வாளர்கள் பிரச்சனைகள் குறித்து கைத்தறித் துறை அமைச்சரிடம் முறையீடு செய்வோம் என்றும் அவர் கூறினார். நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நெசவாளர் தினமான வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தமிழ்நாடு முழு வதும் நெசவாளர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவார்கள். அப்போதும் நட வடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் நடவடிக்கையாக கஞ்சி தொட்டிகள் திறக்கப்படும், இந்த போராட்டம் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் விரிவடையும் என்றும் முத்துக்குமார் தெரிவித்தார். இந்த போராட்டத்தை வாழ்த்தி ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் சேவூர் ராமச்சந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் பெ.கண்ணன், சி.அப்பாசாமி, ப.செல்வன், எஸ்.ராம தாஸ், சிவாஜி, ரவிதாசன், ச.குமரன், ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் பேசினர். ஆரணி பட்டு கைத்தறி ஜவுளி வியா பாரிகள் சங்கத் தலைவர் குருராஜ ராவ் முடித்து வைத்தார்.