மாற்றுத்திறானாளிகள் சங்கம் அறிவிப்பு
சென்னை, அக். 10- அரசு தனியார் நிறுவனங்கள் சமவாய்ப்பு கொள்கையை அரசாணைப்படி வெளியிட கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் அக்-26 ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக மாநிலம் தழுவி யப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு கொள்கையை வெளியிடவும் ஆவணங்களை பராமரிக்கவும் தனியார் நிறுவனங்களிலும் 5 விழுக்காடு பணிகள் வழங்கவும் மாற்றுத்திற னாளிகள் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் இச்சட்டத்திற்கான 2017 விதிகளும் உறுதி அளித்துள்ளது.
இந்த சட்ட விதியை மூன்று மாத காலத் திற்குள் அமல்படுத்த வகை செய்து கடந்த ஜூலை 7 ஆம் தேதி தமிழக மாற்றுத்திறனாளி கள் நலத்துறை அரசாணை(எண்.2) பிறப்பித் துள்ளது. அதன்படி 20-க்கும் குறையாத பணி யாளர்கள் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மாற்றுத்திற னாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கும் வகையி லும், தடையற்ற சூழல் உள்ளிட்டவைகளை உறுதி செய்யும் வகையிலும் கொள்கையை வெளியிட்டு மாற்றுத்திறனாளி கள் நல மாநில ஆணையரிடம் அதனை பதிவு செய்யவும், ஆவணங்களை பராமரிக்கவும் அரசாணை வலியுறுத்துகிறது. இந்த அரசாணையின்படி தனியார் நிறு வனங்களை ஒருங்கிணைக்க மாநில தொழி லாளர் நல ஆணையரையும், தொழிற்சாலை களை ஒருங்கிணைக்க தமிழக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரையும் பொறுப்பாளர் களாக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாணையை 3 மாத காலத்திற்குள் அதாவது அக்-7 ஆம் தேதிக்குள் அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மாற்றுத்திறனாளி கள் நல மாநில ஆணையர் மேற்கண்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு 19.8.2021 அன்று கடிதமும் எழுதியுள்ளார். எனினும், ஓரிரு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த முக்கியமான அரசாணையை அமல் படுத்த ஆலொசனைக் கூட்டம்கூட நடத்தப் படவில்லை என தெரிகிறது.
இதனை கண்டிக்கும் வகையிலும், சட்டத்தையும் அரசாணையையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அமல்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கைகளை வெளியிடவும், தனியார் துறைகளில் சட்டப்படி 5 விழுக்காடு பணி வாய்ப்புகளை உறுதி செய்யவும் வலி யுறுத்தி அக். 26 செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களும், தனி யார் நிறுவனங்களில் வேலை கேட்டு மனு கொடுக்கும் இயக்கமும் நடத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநி லக்குழுக் கூட்டம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.