இடாநகர் மாணவர் சேர்க்கை இல்லை பாஜக ஆளும் அருணாச்சலில் 386 அரசுப் பள்ளிகள் மூடல்
பாஜக ஆளும் அருணாச்சலப்பிர தேசத்தின் முதலமைச்சராக பேமா காண்டு உள்ளார். அவர் பிரத மர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜுஜூவுக்கு மிக நெருக்கமானவர். இந்நிலையில், நடப்பு கல்வியாண் டில் மாணவர் சேர்க்கை இல்லாததால் மாநிலம் முழுவதும் 386 அரசுப் பள்ளி களை மூட அருணாச்சலப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், “ஒருங்கி ணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் செயல்படாமல் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதனால் 386 அர சுப் பள்ளிகளை மூட நடவடிக்கை மேற் கொள்ளப்பட உள்ளது. அதிகபட்சமாக மேற்கு கமெங் மாவட்டத்தில் 73 பள்ளி கள் மூடப்பட்டுள்ளன. பபும் பரேவில் 50 பள்ளிகளும், மேற்கு சியாங்கில் 31 பள்ளி களும், அப்பர் சுபன்சிரி மற்றும் சியாங்கில் தலா 28 பள்ளிகளும், கிழக்கு கமெங்கில் 23 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களிலும் ஒன்று முதல் 22 பள்ளிகள் வரை மூடப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.