சென்னை,டிச.6- தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- “உலகம் முழுவதும் 38 நாடுக ளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி யுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 6 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? எனப் பரிசோதனை செய்து பெங்க ளூரு ஆய்வகத்திற்கு அனுப்பப் ்பட்டது. இதன் பரிசோதனை முடி வில் 6 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. வெளிநாடுகளில் இருந்து தமிழ கம் வந்த 5,858 பேருக்கு இதுவரை ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 12 இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நிலை யங்கள் செயல்படத் தொடங்கி யுள்ளன. ஒமைக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. தடுப்பூசி குறைவாகப் போட்டுக் ்கொண்ட நாடுகளில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஊரடங்கு,கொரோனாதொற்று போன்ற நிலைகளுக்குச் செல்லா மல் இருக்க தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்ததார்.